பிரதமர் நரேந்திர மோடி இன்று டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் கோடீஸ்வரருமான எலான் மஸ்க்கை சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மைக்கேல் வால்ட்ஸ் மற்றும் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி ஆகியோரும் சந்தித்துப் பேசவுள்ளனர். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அன்று வாஷிங்டன், டிசியில் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்டுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். பிரதமர் மோடியும், துளசி கப்பார்டும் இந்தியா-அமெரிக்க நட்பின் பல்வேறு அம்சங்களைப் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
துளசி கப்பார்டுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தனது X பதிவில், இந்தியா-அமெரிக்க நட்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து பேசியதாகவும், துளசி இந்தியாவிற்கு ஒரு வலுவான ஆதரவை தொடர்ந்து வழங்கி வருவதாகவும் பதிவிட்டிருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில் 2 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவிற்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா மற்றும் பிற அதிகாரிகள் அவரை விமான நிலையத்தில் வரவேற்றனர். டொனால்ட் ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும்.
அமெரிக்காவில் தரையிறங்கியதும், பிரதமர் மோடி பிளேர் ஹவுஸுக்கு சென்று, அங்கு கூடியிருந்த இந்திய புலம்பெயர்ந்தோரை வரவேற்றார். பிளேர் ஹவுஸில் அவரை வரவேற்ற மக்கள் "பாரத் மாதா கி ஜெய்" மற்றும் "மோடி மோடி" என்று கோஷமிடத் தொடங்கினர். அதன் பின்னர் பிரதமர் மோடி தன்னை வரவேற்றதற்கு நன்றி தெரிவித்தார்.
குளிர்காலத்தில் கிடைத்த அன்பான வரவேற்பு: "குளிர் காலநிலை இருந்தபோதிலும், வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் என்னை அன்போடு வரவேற்றனர். அவர்களுக்கு எனது நன்றி" என்று பிரதமர் மோடி தனது X பதிவில் பதிவிட்டிருந்தார்.
அமெரிக்கா வந்தடைந்த பிரதமர் மோடி டிரம்பைச் சந்தித்து இந்தியா-அமெரிக்கா இடையே வலுவான கூட்டாண்மையை உருவாக்க ஆவலுடன் இருப்பதாகவும், மக்களின் நலனுக்காகவும் சிறந்த எதிர்காலத்திற்காகவும் தொடர்ந்து இரு நாடுகளும் நெருக்கமாக பணியாற்றும் என்றும், தனது வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டணியை ஆழப்படுத்தும் வாய்ப்பாக பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.
நவம்பர் 2024 முதல், பிரதமர் மோடியும் டிரம்பும் இரண்டு முறை தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக இரு நாட்டுத் தலைவர்கள் சந்திக்கும்போது ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவும்.
2005 ஆம் ஆண்டிலும் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து ஒரு வலுவான கூட்டான்மையை தொடங்கின. பிப்ரவரி 2020-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு டொனால்ட் ட்ரம்ப் பயணம் செய்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் விரிவடைய தொடங்கியது. இந்நிலையில் இந்த முறை பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் சில முக்கிய முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

எல்பிஜி தட்டுப்பாட்டை சரி செய்ய அமெரிக்காவை நாடும் இந்தியா..!! நிலைமை எப்போது சீராகும்?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications