இந்திய மக்களும், தொழிற்துறையினரும் அதிகம் எதிர்பார்த்த வாஷிங்டனில் உள்ள பிளேர் ஹவுஸில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் இடையேயான இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பை தொடர்ந்து அமெரிக்கப் பங்குச்சந்தையில் டெஸ்லா பங்குகள் 6 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. அமெரிக்க நேரப்படி மதியம் 1.35 மணிக்கு டெஸ்லா பங்குகள் 4.59 சதவீதம் உயர்ந்து 351.86 டாலராக உயர்ந்துள்ளது.

டெக் பில்லியனரும், அமெரிக்க அதிபரின் நெருங்கிய விசுவாசியாக மாறியுள்ள எலன் மஸ்க், வியாழக்கிழமை அன்று நரேந்திர மோடியை பிளேயர் மாளிகையில் சந்திப்பதற்காகத் தனது குழந்தைகள் உடன் வந்து அசத்தினார். சமீப காலமாக எலான் மஸ்க் அனைத்து முக்கிய இடங்களுக்கும் தனகு குழந்தைகளை அழைத்துச் செல்கிறார்.
நேற்று டிரம்ப் மற்றும் செய்தியாளர்களை ஓவல் அலுவலகத்தில் சந்திக்க எலான் மஸ்க் சென்றிருந்த போதும் மஸ்க்-ன் தோலில் தன் மகனை உட்கார வைத்துப் பேசிக்கொண்டு இருந்தார். அருகில் டிரம்ப் உட்கார்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மோடி - எலான் மஸ்க் மத்தியிலான பேச்சுவார்த்தையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வேண்டிய ஸ்டார்லிங்க் இன்னும் நிலுவையில் உள்ள உரிமத்தின் ஒப்புதலில் கவனம் செலுத்து அழுத்தம் கொடுக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதோடு வருடக்கணக்கில் பேசப்பட்டு வரும் டெஸ்லா எலக்ட்ரிக் வாகனங்கள் (EV கள்) மீதான கட்டணக் குறைப்பு மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (ISRO) SpaceX இணைந்து பணியாற்றுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கும்.
எலான் மஸ்க்-ஐ சந்தித்த பின்பு நரேந்திர மோடி X தளத்தில் "வாஷிங்டன் DC இல் எலான் மஸ்க் உடன் சிறப்பான சந்திப்பு ஏற்பட்டது. விண்வெளி, மொபிலிட்டி, தொழில்நுட்பம் மற்றும் இன்னோவேஷன் போன்ற பல்வேறு விஷயங்களை நாங்கள் விவாதித்தோம். சீர்திருத்தம் மற்றும் 'குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி' ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகள் குறித்து நான் பேசினேன் என்று பதிவிட்டு இருந்தார்.
எலான் மஸ்க்-ஐ சந்திக்கும் முன்பு நரேந்திர மோடி, அமெரிக்க அரசியலில் கடந்த ஒரு வருடத்தில் அதிகம் பேசப்பட்ட விவேக் ராமசாமியை சந்தித்தார். வாஷிங்டன் டிசியில் உள்ள பிளேர் மாளிகையில் தான் இவர்களுக்கான சந்திப்பும் நடந்தது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!



Click it and Unblock the Notifications