உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக அலுவலகம் ரெடி.. 17ம் தேதி மோடி நேரா வந்து திறந்து வைக்கிறார்..!

நம் நாட்டில் வைர தொழிலுக்கு புகழ் பெற்ற நகரம் குஜராத்தின் சூரத். வைரத் தொழிலுக்கு பெயர் பெற்றது என்றாலும் அங்கு இதுவரை வைரத்துக்கான பெரிய வர்த்தக மையம் கிடையாது.

மாறாக, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையமான பாரத் டைமண்ட் போர்ஸ் உள்ளது. இந்த வளாகத்தில் 2 லட்சம் சதுர அடியில் மொத்தம் 2,500 அலுவலகங்கள் உள்ளன. நாட்டின் முன்னணி வைர வர்த்தகர்கள் இந்த வர்த்தக மையத்தில் அலுவலகங்களை கொண்டுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக அலுவலகம் ரெடி.. 17ம் தேதி மோடி நேரா வந்து திறந்து வைக்கிறார்..!

இந்த சூழ்நிலையில், நாட்டின் முன்னணி வைர மையமாக மும்பைக்கு பதிலாக சூரத்தை மாற்றும் நோக்கில், உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக சூரத் டைமண்ட் போர்ஸ் என்ற பிரமாண்டமான வைர வர்த்தக மையம் அங்கு கட்டப்பட்டு வந்தது.

65,000க்கும் மேற்பட்ட கட்டிங், பாலிஷ் செய்பவர்கள், வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிபுணர்கள் உள்ளிட்ட இத்துறையை சேர்ந்தவர்களுக்கு வசதியான மையமாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த கட்டிடத்தின் நோக்கம்.

அமெரிக்க ராணுவ தலைமையமாக பென்டகனை காட்டிலும் இந்த வைர வர்த்தக் மையம் பெரிது என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், உலகின மிகப்பெரிய அலுவலக கட்டிடாக கின்னஸ் வேர்ல்டு ரிகார்ட்ஸால் அங்கீகரிக்கப்பட்டது.

சூரத் டைமண்ட் போர்ஸ் தற்போது திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகமான சூரத் டைமண்ட் போர்ஸ் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி 17ம் தேதி திறந்து வைக்கிறார். திறப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் நாடு மற்றும் உலகம் முழுவதுமாக 70,000 பேருக்கு திறப்புவிழா அழைப்பிதழ்களை விழா ஏற்பாட்டாளர்கள் அனுப்பியுள்ளனர்.

2015ல் இந்த வைர வர்த்தக மையம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளில் சுமார் ரூ.3,500 கோடி செலவில் 35.54 ஏக்கர் நிலத்தில் 15 தளங்களுடன் 9 டவர்கள் கொண்ட கட்டிடமாக வர்த்தக மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மெகா கட்டிடத்தில் 300 சதுர அடி முதல் 1 லட்சம் சதுர அடி வரையிலான அலுவலக இடங்கள் உள்ளன.

இந்த வர்த்தக மையம் சுமார் 4,500 வைர வர்த்தக அலுவலகங்களை கொண்டிருக்கும் திறன் கொண்டது. இந்த கட்டிடம் இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் பிளாட்டினம் தரவரிசையில் உள்ளது.

அலுவலகங்களை தவிர்த்து டைமண்ட் போர்ஸ் வளாகத்தில் பாதுகாப்பு வைப்பு அறைகள், கருத்தரங்கு அறைகள், பன்நோக்கு அறைகள், உணவகங்கள், வங்கிகள், சுங்க அனுமதி நிறுவனம், கன்வென்ஷன் மையம், கண்காட்சி மையங்கள், பயிற்சி மையங்கள், பொழுதுபோக்கு பகுதிகள் மற்றும் பாதுகாப்புடன் கூடிய கிளப்புகள் உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+