சமீபத்தில் பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக் அவர்கள் மக்களிடம் நெருங்கி பழகி வருவதாகவும் அணுகக்கூடிய வகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
அந்த வகையில் திடீரென நேற்று அவர் லண்டனில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் பாப்பி மலர்களை விற்பனை செய்தது பெரும் பயணிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது
பிரிட்டன் பிரதமர் எதற்காக மலர்கள் விற்பனை செய்தார் என்பதை தற்போது பார்ப்போம்.
நிதி அமைச்சர் ரிஷி சுனக்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பிரிட்டனின் நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக் அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் போரிஸ் ஜான்சனும் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தபின் ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டார்.
பிரதமர் பதவி
ரிஷி சுனக் அவர்களுக்கு ஓரளவு ஆதரவு இருந்த போதிலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட லிஸ் டிரஸ் தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் லிஸ் ட்ரஸ் பதவி ஏற்ற லேஸ்ட் 45 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து பிரதமர் பதவி ரிஷி சுனக் அவர்களை தேடி வந்தது
அதிரடி நடவடிக்கை
இதனை அடுத்து கடுமையான பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், பொருளாதார மந்தநிலை ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் அவர்கள் சமீபத்தில் பதவியேற்றார். அவர் பதவி ஏற்றவுடன் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகள் பிரிட்டனின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ரயில்வே ஸ்டேஷனில் வியாபாரம்
இந்த நிலையில் நேற்று லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ரயில்வே ஸ்டேஷனில் திடீரென பிரதமர் ரிஷி சுனக், பாப்பி என்ற மலர்களை விற்பனை செய்தது பயணிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. போர்க்காலங்களில் மரணம் அடையும் சிப்பாய்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விற்பனை செய்யப்படும் பாப்பிகளை அவர் ரயில் நிலையத்தில் விற்பனை செய்தார். பிரிட்டனின் படைவீரர்கள் நலனுக்காக நிதி திரட்டுவதற்காக அவர் இந்த விற்பனையை மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது. அவருடன் இராணுவ வீரர்களும் உடனிருந்தனர்.
பயணிகள் ஆச்சரியம்
பிசியான லண்டன் ரயில்வே ஸ்டேஷனில் பிரதமர் ரிஷி சுனக், பாப்பி மலர்களை விற்பனை செய்வதை பார்த்த பயணிகள் பெரும் ஆச்சரியம் அடைந்தனர். ஒரு பயணி இதுகுறித்து தனது ட்விட்டரில் கூறியபோது நான் வெஸ்ட்மின்ஸ்டர் ரயில்வே ஸ்டேஷனுக்கு டிக்கெட் வாங்கச் சென்றபோது பிரதமரை பார்ப்பேன் என்று நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.
எளிதில் அணுகக்கூடியவர்
இன்னொரு ட்விட்டர் பயனாளி பிரதமர் ரிஷி சுனக் அவர்கள் பொதுமக்களிடம் எளிதில் அணுகக்கூடியவராகவும், மிகவும் அடக்கமாக இருப்பதாகவும் அவருடைய அணுகுமுறை தனக்கு மிகவும் பிடித்த உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். லண்டன் ரயில் நிலையத்தில் திடீரென பாப்பி மலர்களை பிரதமர் ரிஷி சுனக் விற்பனை செய்ததால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications