பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டம் என்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான திட்டமாகும். சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர், நகர்ப்புற ஏழைகள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடு வழங்குவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம். இந்த ஆண்டோடு PM ஆவாஸ் யோஜனா திட்டம் முடிவடைய இருந்தது. ஆனால் அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை நீட்டித்துள்ளது. இதனுடன் சில புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி பைக்குகள் மற்றும் பிரிட்ஜ் வைத்திருக்கும் நபர்களுகளும் PM ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த மாற்றங்கள், விண்ணப்பதாரர்களின் வரம்பை விரிவுபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், 2029-ஆம் ஆண்டுக்குள் வீடற்ற நிலையை ஒழிக்கும் இலக்கை அடையும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

முதன் முதலில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு தகுதியான ஏழை மக்களின் பட்டியல் 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு அந்த பட்டியலைத் தற்போது புதுப்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஒரு கூட்டத்தை நடத்தி அதில் இருந்து வீடு தேவைப்படும் நபர்களை தேர்வு செய்யும் பணியில் தற்போது அரசு ஈடுபட்டு வருகிறது.
PMAY-இன் இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ், கிராமத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் அதிகாரம் கிடையாது. அதாவது அவர்களின் விருப்பத்திற்கு இணங்க இனி விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்ய முடியாது.
இந்த புதிய வழிகாட்டுதல்களின் படி, பாரபட்சத்தை தடுக்கவும், வீட்டு வசதி திட்டம் மிகவும் தகுதியான நபர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரதமர் வீட்டு வசதி திட்டம் (PMAY): பிரதான் மந்திரி வீட்டு வசதி திட்டம், 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வீடு வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
PM அவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடு வாங்குவதற்கு பெரும் கடன்களுக்கு கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டம் (CLSS) மூலம் அரசு மானியத்தை வழங்குகிறது.
பயனாளிகள் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு (EWS), குறைந்த வருமானம் கொண்ட பிரிவு(LIG) மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட பிரிவு (MIG) என மூன்று குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றனர்.
2024-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் PM அவாஸ் யோஜனா திட்டத்திற்கு 66 சதவீத நிதியை உயர்த்தி, மொத்த செலவினத்தை ரூ.79,000 கோடியாக உயர்த்தி அறிவித்தார். கோவிட்-19 இருந்தபோதிலும், மூன்று கோடி வீடுகளை கட்டும் இலக்கை திட்டம் நெருங்கி வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு கோடி வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
PMAY இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது - நகர்ப்புற மற்றும் கிராமப்புறம். நகர்ப்புற திட்டம் 4,000-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள EWS, LIG மற்றும் MIG மக்களை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புறத் திட்டம், கிராமப்புறங்களில் வீட்டுவசதி வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications