9 நாளில் 118% லாபம்.. பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் கொடுத்த பெரிய வாய்ப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் வீட்டுக் கடன் வர்த்தகம் மிகப்பெரியது, அதிலும் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா ஆகிய திட்டங்களை அறிமுகம் செய்த பின்பு இப்பிரிவு வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் மிகையில்லை.

இந்தச் சூழ்நிலையில் வீட்டுக்கடன் பிரிவில் வேகமாக வளர்ந்து வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை நிறுவனமான பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் கடந்த 9 நாட்களில் மட்டும் சுமார் 100 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

118 சதவீதம் வளர்ச்சி

118 சதவீதம் வளர்ச்சி

கடந்த மே 25ஆம் தேதி பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனப் பங்குகள் வெறும் 403.70 ரூபாய்க்கு வர்த்தகம் செய்து வந்த நிலையில், தற்போது 118 சதவீதம் வளர்ச்சி அடைந்து 881.40 ரூபாய் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ்

பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ்

அதாவது நீங்கள் மே 25ஆம் தேதி பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனப் பங்குகள் மீது 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போது 2,18,000 ரூபாயாக உயர்ந்திருக்கும். கொரோனா தொற்று, பொருளாதாரச் சரிவு ஆகியவற்றுக்கு மத்தியில் இந்தத் தடாலடி வளர்ச்சி பெரும் லாபமாக உள்ளது.

பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் பங்கு விலை

பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் பங்கு விலை

இன்றைய வர்த்தகத்தில் கூடப் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 5 சதவீதம் வரையில் ஒரு பங்கு விலை 41.95 ரூபாய் வரையில் அதிகரித்து 881.40 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இந்த அதிரடி வளர்ச்சிக்கு என்ன காரணம் தெரியுமா..?!

கார்லைல் குரூப் மற்றும் ஆதித்யா பூரி

கார்லைல் குரூப் மற்றும் ஆதித்யா பூரி

பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு நிறுவனமான கார்லைல் குரூப் மற்றும் ஹெச்டிஎப்சி வங்கியின் முன்னாள் தலைவர் ஆதித்யா பூரி ஆகியோர் முதலீடு செய்வதாக அறிவித்த நிலையில், இந்நிறுவனப் பங்குகள் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

4000 கோடி ரூபாய் புதிய முதலீடு

4000 கோடி ரூபாய் புதிய முதலீடு

ஆதித்யா பூரி தற்போது கார்லைல் குரூப்-ன் மூத்த ஆலோசகராக உள்ளார், இந்த வேளையில் இருவரும் இணைந்து சுமார் 4000 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளனர்.

அமெரிக்காவின் கார்லைல் குரூப்

அமெரிக்காவின் கார்லைல் குரூப்

இந்த முதலீட்டுச் சுற்றில் கார்லைல் குரூப் மட்டும் சுமார் 3,185 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்துள்ளது. இதன் வாயிலாகப் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் மிகப்பெரிய முதலீட்டாளராகக் கார்லைல் குரூப் விளங்குகிறது.

பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனப் பங்குகளில் நீங்கள் முதலீடு செய்திருந்தால் கமெண்ட் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PNB Housing Finance up 118% in just 9 days: After 4000 crore Carlyle, aditya puri investment

PNB Housing Finance up 118% in just 9 days: After 4000 crore Carlyle, aditya puri investment
Story first published: Monday, June 7, 2021, 16:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X