உலக அளவில் பேர் போன பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழல் நீரவ் மோடியின், ஜாமீன் மனுவினை லண்டன் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்தியாவில் இருந்து லண்டனுக்கு தப்பி ஓடிய மோசடி மன்னன் தான் நிரவ் மோடி, லண்டனில் கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் கடன் உத்திரவாத கடிதங்களை வங்கி ஊழியர்கள் உதவியுடன் மோசடியாக பெற்ற வைர வியாபாரியான நிரவ் மோடி, கடந்த 2011ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை வெளிநாடுகளில் உள்ள வங்கி கிளைகளில் தனது நிறுவனத்திற்காக சுமார் 13,000 கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் மோசடி குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது தெரியவந்ததும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிரவ் மோடி லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிரவ்மோடிக்கு சொந்தமான 1720 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. கடந்த வாரம் நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது கூடுதல் குற்றப் பத்திரிகையை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் நிரவ் மோடி லண்டனில் தஞ்சமடைந்திருப்பதும், லண்டன் வீதிகளில் அவர் உல்லாசமாக சுற்றித் திரியும் காட்சிகள் வெளியானது. மேலும் அவர் லண்டனில் புதிதாக வைரம் விற்பனை நிறுவனத்தை அவர் தொடங்கியிருக்கிறார் என்றும் நாளிதழ் ஒன்று செய்தியை வெளியிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கைக்கு பின், பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, லண்டனில் காவல்துறையினர் நிரவ்மோடியை கைது செய்தனர்.
கிட்டதட்ட 2 பில்லியன் அமெரிக்க டாலர் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி மற்றும் பணமோசடி செய்ததாக இந்தியா கூறி வரும் நிலையில், அவரது ஜாமீன் மனு மீண்டும் இன்று மறுக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications