சென்னை: அரசாங்கத்திற்குச் சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் எந்தப் பரிவர்த்தனையும் செய்யாத சேவிங்ஸ் அக்கவுண்டுகளை வங்கி மூட உள்ளது. இந்த முடிவு, பேலன்ஸ் இல்லாமல் பயன்படுத்தப்படாமல் இருக்கும் அக்கவுண்டுகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
PNB வங்கி 3 வருடங்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் சேவிங்ஸ் அக்கவுண்ட்களை ஆக்டிவேட் செய்து அதன் பேலன்ஸை பராமரிக்க, ஜூன் 30 வரை காலக்கெடு விதித்துள்ளது. PNB இந்த அறிவிப்பை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில், தங்கள் இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

PNB வங்கி பயன்படுத்தப்படாமல் இருக்கும் வங்கி கணக்குகளில் மோசடி சம்பவங்கள் நடக்காமல் இருக்க இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுவாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் வங்கி கணக்குகளை தான் மோசடிக்காரர்கள் பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பான செயல்களைச் செய்கின்றனர். இதனைத் தடுக்கும் பொருட்டு வங்கி தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து PNB வங்கி, தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் கூறியதாவது, "கடந்த 3 ஆண்டுகளில் பல வாடிக்கையாளர்கள் கணக்குகளில் எந்த செயல்பாடும் இல்லை என்பதையும், இந்த கணக்குகளில் பேலன்ஸ் இல்லை என்பதையும், இதனால் இந்தக் கணக்குகள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, வங்கி அவற்றை மூட முடிவு செய்துள்ளது" என்றும் தெரிவித்துள்ளது. இதனை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க வங்கி நோட்டீஸ் அனுப்பிய தேதிகளையும் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, இந்த கணக்குகளை ஜூன் 1-ஆம் தேதி அன்று மூட PNB முடிவு செய்தது. ஆனால், அதன் பிறகு காலக்கெடுவை ஒரு மாதம் நீட்டித்தது.

ஆனால் சில அக்கவுண்டுகளை மூடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் டிமேட் அக்கவுண்டுகள், 25 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியரின் அக்கவுண்டுகள், மைனர் அக்கவுண்டுகள், PNB மூலம் குறிப்பிட்ட திட்டங்களுக்காக திறக்கப்பட்ட அக்கவுண்டுகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளால் முடக்கப்பட்ட அக்கவுண்டுகள், வருமான வரித்துறை உத்தரவுகள் அல்லது பிற சட்ட பூர்வ அதிகாரிகளால் முடக்கப்பட்ட அக்கவுண்டுகள் ஆகியவை மூடப்படாது.
காலக்கெடுவிற்குப் பிறகு வங்கிக் கணக்குகள் மூடப்பட்டவுடன், கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கிளைக்குச் சென்று தேவையான அனைத்து ஆவணங்களுடன் KYC படிவத்தை நிரப்புவதன் மூலம் மட்டுமே அவற்றை மீண்டும் செயல்பட வைக்க முடியும். மேலும் விவரங்களுக்கு, கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது கிளையைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications