பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போக போறீங்களா..? ரயில் டிக்கெட்டுகள் காலி.. இனி என்ன செய்வது.?

பொங்கல் பண்டிகை தொடங்க இன்னும் 8 நாட்களே உள்ளது. தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு ஏற்கனவே 6 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.

அத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்காக சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இந்த ரயில்கள் அறிவிக்கப்பட்ட சில மணிதுளிகளில் டிக்கெட்டுகள் விற்று தீர்த்தன. இதனால், தற்போது இந்த ரயில்கள் காத்திருப்பு பட்டியலுக்கு வந்துள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போக போறீங்களா..? ரயில் டிக்கெட்டுகள் காலி.. இனி என்ன செய்வது.?

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜன.14-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. எனவே, தற்போது சென்னை​யில் இருந்து தமிழகத்​தின் பல்வேறு நகரங்​களுக்கு தினசரி இயக்​கப்​படும் அனைத்து விரைவு ரயில்​களி​லும் முக்கிய நாட்​களில் டிக்​கெட் முன்​ப​திவு முடிந்​து​விட்​டது. அதன்படி, தாம்​பரத்​தில் இருந்து திருநெல்​வேலி, கன்னி​யாகுமரி, ராமநாத​புரத்​துக்கு 3 சிறப்பு ரயில்​களும், சென்னை சென்ட்​ரலில் இருந்து நாகர்​கோ​விலுக்கு ஒரு சிறப்பு ரயிலும் கடந்த 3-ம் தேதி அறிவிக்கப்பட்டன.

இந்த சிறப்பு ரயில்​களுக்கான டிக்​கெட் முன்​ப​திவு ஐஆர்​சிடிசி இணைய தளம் வழியாக​வும், முன்​ப​திவு மையங்​களி​லும் நேற்று காலை 8 மணிக்கு தொடங்​கியது. இந்த நிலையில், சென்னை​யில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜன.12-ம் தேதி புறப்​படும் சிறப்பு ரயில், தாம்​பரத்​தில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாத​புரத்​துக்கு ஜன.13-ம் தேதி இயக்​கப்​படும் தலா ஒரு சிறப்பு ரயிலிலும் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்​டிகளில் டிக்​கெட் முன்​ப​திவு சில நிமிடங்​களில் முடிந்து இப்போது காத்திருப்​போர் பட்டியல் ஆனது.

குறிப்​பாக, சென்னை சென்ட்ரல் - நாகர்​கோ​விலுக்கு ஜன.12-ம் தேதி புறப்​படும் சிறப்பு ரயிலில் சில நிமிடங்​களில் டிக்​கெட் முன்​ப​திவு முடிந்​தது. இந்த ரயிலில் மதியம் ஒரு மணி நிலவரப்​படி, காத்​திருப்​போர் பட்டியல் பதிவும் முடிந்து, ரெக்ரெட் செய்யப்பட்டது. இதுபோல, திருநெல்​வேலிக்கும் தாம்பரத்​துக்குக்கும் ஆன ஜன.19-ம் தேதி இயக்​கப்​படும் சிறப்பு ரயிலில் 2-ம் வகுப்பு தூங்​கும் வசதி பெட்டி​யில் முன்​ப​தி​வும் முடிந்​தது.

சென்னை எழும்​பூர், சென்ட்ரல் உட்பட முக்கிய ரயில் நிலை​யங்​களில் உள்ள முன்​ப​திவு மையங்​களில் சிறப்பு ரயில்​களில் டிக்​கெட் எடுக்க பொது​மக்கள் நீண்​ட நேரம் வரிசை​யில் காத்​திருந்​தனர். ஆனால், முன்​ப​திவு தொடங்கிய சில நிமிடங்​களில் முடிந்​த​தால், டிக்​கெட் கிடைக்​காமல் பெரும்பாலான பயணிகள் ஏ​மாற்​றம் அடைந்​தனர். இதனால் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர்களின் வசதிக்காக ஆண்டுதோறும் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான கூடுதல் ரயில்கள், மற்றும் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகாலம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தமிழகம் முழுவதிலும் வரும் ஜனவரி 14 முதல் ஜனவரி 19 ஆம் தேதி வரை 6 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+