பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் வாயிலாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை 3,000 ரூபாய் வழங்குகிறது. இதற்காக டோக்கன் வழங்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு விநியோகமும் தொடங்குகிறது. இந்நிலையில் பலரும் தங்களுக்கு டோக்கன் கிடைக்கவில்லை என கூறுகின்றனர். தங்களுடையது அரிசி ரேஷன் அட்டையாக இருந்த போதிலும் இதுவரை டோக்கன் வழங்கப்படவில்லை, எனவே எங்களுக்கு பொங்கல் பரிசு தொகை கிடைக்காதா என குழப்பத்தில் உள்ளனர்.

ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாகவே தங்கள் கடைகளுக்கு உட்பட்ட அரிசி அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை விநியோகம் செய்தனர். கடந்த சில நாட்களாகவே இந்த பணி நடைபெற்றது . இந்த டோக்கனில் குறிப்பிட்ட அந்த ரேஷன் அட்டைதாரர் எந்த தேதியில் எந்த நேரத்தில் வந்து பொங்கல் பரிசு தொகுப்பையும் பொங்கல் பரிசு தொகையையும் பெறவேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த தேதியில் அந்த நேரத்தில் இவர்கள் கடைக்கு வந்து பொங்கல் பரிசு தொகையையும் தொகுப்பையும் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு ரேஷன் கடை ஊழியர்கள் வரும் போது சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளில் இல்லாமல் போயிருக்கலாம், அல்லது தவறுதலாக விடுபட்டிருக்கலாம். எனவே டோக்கன் கிடைக்கப்பெறாதவர்களுக்கு பொங்கல் பரிசு தொகை கிடைக்காதா என்ற சந்தேகம் பலரிடமும் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசினை பொறுத்தவரை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை கிடைக்கும் என தெரிவித்திருக்கிறது.
உங்களுடையது அரிசி ரேஷன் அட்டை ஆனால் டோக்கன் வரவில்லை என்றாலும் உங்களுடைய ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பும் பொங்கல் பரிசு தொகையும் கட்டாயம் கிடைக்கும் . நீங்கள் நேரடியாக உங்களின் ரேஷன் கடைக்கு சென்று ரேஷன் கடை ஊழியர்களை தொடர்பு கொண்டு கேட்கலாம். அவர்கள் உங்களுக்கான டோக்கனை வழங்குவார்கள். அதில் குறிப்பிட்டிருக்கும் தேதியில் நீங்கள் பரிசு தொகை பொருட்கள் வாங்கி கொள்ளலாம்.
ரேஷன் கடைகளில் எந்த தெருவை சேர்ந்த மக்களுக்கு எந்த நாளில் விநியோகம் என எழுதி வைத்திருப்பார்கள். டோக்கன் இல்லை என்றாலும் அந்த தேதியில் சென்று டோக்கன்கள் முடிந்ததும் கடைசியாக வாங்கி கொள்ளலாம். இல்லை என்றால் டோக்கன் பெறாதவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை வழங்குவதற்கு என ஒரு சிறப்பு விநியோக தேதி அறிவிக்கப்படும். அந்த நாளில் சென்று நீங்கள் பொங்கல் பரிசு தொகுப்பு அல்லது பொங்கல் பரிசு தொகையை வாங்கிக் கொள்ளலாம்.
எனவே டோக்கன் கிடைக்கவில்லை என்றால் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்காது என மக்கள் குழம்பிக் கொள்ள வேண்டாம். உங்களுடையது அரிசி அட்டை என்றால் கட்டாயம் உங்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!



Click it and Unblock the Notifications