பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது. தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் பொங்கல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் வெளியூர்களில் வேலை செய்பவர்களும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி சொந்த பந்தங்களோடு பொங்கல் வைத்து கொண்டாடும் நிகழ்வாக இது இருக்கிறது. அதோடு ஒவ்வொரு ஊர்களிலும் விளையாட்டு போட்டிகள் நடத்துதல், குடும்பங்கள் சேர்ந்து வெளியே செல்லுதல் என ஊரே கலை கட்டும்.
அப்படி இருக்கையில் இந்த முறையும் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல பலர் விடுமுறையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஜனவரி 13-ஆம் தேதி முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை விடுமுறை வழங்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தொடர்ந்து 9 நாள் விடுமுறை கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

தமிழர் திருநாளான பொங்கலை கொண்டாட மக்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையிலிருந்து மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். இந்த ஆண்டும் பொங்கல் விழா அதே உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 1 வாரமே உள்ள நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பயணிக்க வேண்டி சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்களும் சொந்த வாகனங்களில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி திங்கட்கிழமையும் பொங்கலுக்குப் பிறகு ஜனவரி 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஒருவேளை ஜனவரி 13-ஆம் தேதி மற்றும் 17 ஆகிய தேதிகளில் விடுமுறை வழங்கப்பட்டால் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இது தொடர்பாக பல்வேறு குழுக்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். SDPI கட்சியின் மாநில தலைவரான நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் ஜனவரி 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் 16-ஆம் தேதி வியாழன் வரை மூன்று நாட்கள் கொண்டாடப்படும். எனவே ஜனவரி 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தமிழக அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அதோடு ஜனவரி 18 மற்றும் 19 சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வருகிறது. எனவே பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு கூடுதல் நாட்களுக்கு தங்கள் ஊரிலேயே தங்கும் வகையில் இந்த விடுமுறை அமையும். இதை எதிர்பார்த்து தான் பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications