பொங்கல் பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வரும் முக்கியமான விஷயம் ஜல்லிக்கட்டு. காலம் காலமாக தமிழரின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக இருக்கும் ஜல்லிக்கட்டில் கடந்த சில வருடங்களாக அதிகப்படியானோர் கலந்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருவது பாராட்டப்பட கூடியதாக உள்ளது.
இந்த விளையாட்டை ஊக்குவிக்க மதுரையில் அலங்காநல்லூருக்கு அருகில் உள்ள கீழக்கரையில் ஜல்லிக்கட்டுக்கென பிரத்தியேகமாக தமிழ்நாடு அரசு அமைக்கப்பட்டுள்ள நவீன மைதானத்தை தொடர்ந்து 2வது மைதானம் திருச்சியில் திறக்கப்பட தயாராகி வருகிறது.

தமிழ்நாட்டில் பாரம்பரியமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு நிரந்தர மைதானம் கட்டும் முயற்சியில் மற்றொரு மைல்கல் நிகழ்வாக இதை பார்க்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் பகுதியில் உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானம் ஜனவரி 15, 2026 அன்று பொங்கல் திருநாள் அன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு இங்கு ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடைபெற்று வருகிறது. இக்கிராம மக்கள் நீண்டகாலமாக நிரந்தர மைதானம் கோரி வந்த நிலையில், அரசு இந்த கோரிக்கையை ஏற்று 3 கோடி ரூபாய் செலவில் மைதானத்தை அமைத்துள்ளது.
இறுதிக்கட்ட கட்டுமானப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. விழாவிற்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யும் வகையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மைதானத்தை பார்வையிட்டார். பணிகளை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த மைதானத்தை திறந்து வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் டிவிட்டர் பதிவு வாயிலாக தெரிவித்தார். இந்த நிகழ்வு பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிப்பதோடு, கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையையும் நிறைவேற்றும் முக்கிய நிகழ்வாக அமையவுள்ளது. இதுக்குறத்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டு உள்ளார்.

2026-ஆம் ஆண்டு தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக மதுரை மாவட்டத்தின் மூன்று முக்கிய இடங்கள் உலகப் புகழ்பெற்றவை. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஜனவரி 15 தேதி நடைப்பெறும் (தைப்பொங்கல் அன்று), பாலமேடு ஜல்லிகட்டு ஜனவரி 16 தேதி நடைப்பெறும் (மாட்டுப் பொங்கல் அன்று), அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17 தேதி நடைப்பெறும் (காணும் பொங்கல் அன்று).
இதை தொடர்ந்து புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு நடந்து முடிந்த நிலையில் இனி மதுரை தொடர்ந்து அடுத்தடுத்து பல மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications