பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்போடு எவ்வளவு ரொக்கம் வழங்கும் என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் ஒரு குட் நியூஸ் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை ஒட்டி தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்க இருப்பதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய் பொங்கல் பரிசு தொகையாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.

இதற்கிடையே தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்புக்கான பணிகளை தீவிரப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன . ரேஷன் கடைகளுக்கு பச்சரிசி, சர்க்கரை ,வேட்டி மற்றும் சேலை உள்ளிட்ட பொருட்களை அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறதாம். கிட்டத்தட்ட 85 சதவீத பணிகள் நிறைவு பெற்று விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எனவே கூடிய விரைவில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்பட்டிருக்கிறது.
தற்போது வரை தமிழக ரேஷன் கடைகளுக்கு 22,291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம் இது தவிர 1.77 கோடி வேஷ்டி மற்றும் சேலைகளும் கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பொங்கல் பரிசு தொகுப்பில் அரிசி, சர்க்கரை மற்றும் வேட்டி சேலை உள்ளிட்டவை இடம்பெறும் என்பது உறுதியாகி இருக்கிறது.
இத்துடன் கரும்பு வழங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருவதாகவும் ரொக்க பணம் வழங்குவதற்கு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஜனவரி ஒன்றாம் தேதி அன்று புத்தாண்டு தினத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அறிவிப்பினை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது.
அப்போது பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இடம் பெறும் அதே போல பொங்கல் பரிசு ரொக்கமாக எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பதையும் முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என கூறப்படுகிறது. 2கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பும், ரொக்கமும் கிடைக்கப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
எப்படி இருந்தாலும் இந்த வார இறுதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு ரொக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகிவிடும். அடுத்தவாரம் டோக்கன் விநியோகம் தொடங்கி பொருட்களும் விநியோகமும் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications