தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை 3,000 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் ஜோராக நடைபெற்று வருகின்றன.
கடந்த 8ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் பொங்கல் பரிசு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனை அடுத்து தமிழ்நாடு முழுவதும் இருக்கக் கூடிய அனைத்து ரேஷன் கடைகள் வாயிலாகவும் பொங்கல் பரிசுத் தொகை 3000 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கு பணிகள் தொடங்கப்பட்டன. தகுதி வாய்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு முன்கூட்டியே டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டதால் மாநிலம் முழுவதுமே சீரான முறையில் பொங்கல் பரிசு விநியோகம் என்பது நடைபெற்றது.

தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரம் மற்றும் நாளில் ரேஷன் கடைகளுக்கு வந்து சுமூகமான முறையில் பொங்கல் பரிசு தொகையையும் பொங்கல் பரிசு தொகுப்பையும் மக்கள் வாங்கி சென்றார்கள். பல ரேஷன் கடைகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொங்கல் பரிசு பெறுவதற்கு இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாடு அரசு நாளையும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
தமிழக முழுவதும் நியாய விலை கடைகளில் ஜனவரி 14-ஆம் தேதியான நாளையும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே இதுவரை பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்காதவர்கள் வெளியூர்களில் தங்கி இருப்பவர்கள் நாளைக்குள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பரிசு தொகையை வாங்கிக் கொள்ளலாம்.
டோக்கன் கிடைக்காதவர்கள், டோக்கன் பெற்றும் உரிய தேதியில் கடைக்கு சென்று பரிசு வாங்க முடியாதவர்கள் என அனைவருக்கும் இன்றும் நாளையும் பொங்கல் பரிசு பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசினை பொறுத்தவரை அனைத்து பயனாளிகளுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகையான 3 ஆயிரம் ரூபாயும் பொங்கல் பரிசு தொகுப்பான அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவையும் கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறது.
ஏராளமானவர்கள் இன்னும் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லாமல் இருக்கின்றனர் என்பதை கருத்தில் கொண்டும் பலரும் இன்று தான் ஊருக்கு புறப்படுகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டும் தமிழ்நாடு அரசு நாளை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகையும் பொங்கல் பரிசு தொகுப்பும் கிடைக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
ரேஷன் அட்டையில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் வந்து தான் கைவிரல் ரேகை அல்லது கரு விழி சரிபார்ப்பு மூலம் பொங்கல் பரிசு தொகை பெற முடியும். எனவே மக்கள் நாளைக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தங்களுக்கான பொங்கல் பரிசு தொகையை தவறாமல் பெற்று கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி



Click it and Unblock the Notifications