பாதுகாப்பான அதேசமயம் அதிக வருமானம் தரும் முதலீட்டை தேடிக் கொண்டிருந்தால் உங்களுக்காக அரசு ஒரு சிறப்பு திட்டத்தை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுடைய முதலீடு இரட்டிப்பாகும். இன்றெல்லாம் முதலீட்டாளர்களுக்கு, தங்கள் முதலீடு அப்படியே இரட்டிப்பாக வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. அப்படி ஒரு திட்டத்தை தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம். அரசு வழங்கும் இந்த திட்டத்தில் ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால் அதற்கு ரூ.5 லட்சம் வட்டி வருமானம் பெறலாம்.
போஸ்ட் ஆபீஸ்களில் லாபகரமான முதலீட்டு திட்டங்கள் வழங்கப்படுகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் கிசான் விகாஸ் பத்ரா (KVP). KVP என்பது அரசாங்கத் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு தற்போது 7.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். KVP திட்டத்திற்கு அதிகபட்ச வரம்பு இல்லை. உங்களால் எவ்வளவு முதலீடு செய்ய முடியுமோ அந்த அளவுக்கு முதலீடு செய்யலாம்.

இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் உங்களுடைய முதலீடு அப்படியே இரட்டிப்பாகும். அதாவது நீங்கள் எவ்வளவு அசலை முதலீடு செய்கிறீர்களோ? அதே அளவுக்கு வட்டி வருமானம் கிடைக்கும்.
முதிர்வு காலம்: KVP திட்டத்தின் முதிர்வு காலம் 115 மாதங்கள். அதாவது தோராயமாக 9 ஆண்டுகள் 7 மாதங்கள். இந்தக் காலகட்டத்திற்குள் உங்களுடைய முதலீடு அப்படியே இரட்டிப்பாகும். உதாரணமாக நீங்கள் ரூ. 5 லட்சத்தை முதலீடு செய்தால் ரூ.5 லட்சம் வட்டி கிடைக்கும். இதன் விளைவாக மொத்த முதிர்வு தொகை ரூ.10 லட்சமாக இருக்கும். அதேபோல ரூ. 10 லட்சத்தை முதலீடு செய்தால் ரூ. 10 லட்சம் வட்டி கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வு தொகை ரூ. 20 லட்சமாக இருக்கும்.
100% பாதுகாப்பான முதலீடு: KVP திட்டம் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு திட்டம். இது முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் ஆபத்து இல்லாத முதலீடாகும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை ஆபாயங்களுக்கு உட்பட்டவை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்தத் திட்டம் அப்படி இல்லை. அரசாங்கத் திட்டம் என்பதால் உங்களுடைய முதலீடுக்கு 100 சதவீதம் பாதுகாப்பான வருமானத்தை பெற முடியும். உறுதியான வருமானத்துடன் பாதுகாப்பான நீண்டகால முதலீட்டை தேடுபவர்களுக்கு கேவிபி சிறந்த தேர்வாக இருக்கும்.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications