சென்னை: தபால் நிலையங்களில் வழங்கப்படும் பல்வேறு சேமிப்பு திட்டங்களும் வங்கிகளை விட அதிக வட்டி வருமானத்தை வழங்கக்கூடியவையாக இருக்கின்றன. அந்த வகையில் 7%க்கும் மேல் வட்டி வழங்கக்கூடிய ஒரு திட்டம் தான் அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் (POST OFFICE MONTHLY INCOME SCHEME).
முதலுக்கு மோசம் இல்லாத கணிசமான வட்டி வருவாயை தரக்கூடிய ஒரு திட்டம் இது. அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் ஒரு முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் பணத்தை செலுத்தலாம் அதேபோல ஒவ்வொரு மாதமும் வட்டியானது உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும். இதில் உங்களுக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி பிடித்தம் செய்யப்படாது. மத்திய அரசின் நிதி துறையின் கீழ் செயல்படக்கூடிய ஒரு திட்டம் இது என்பதால் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பாக இதனை கருதி மக்கள் நம்பிக்கையோடு இது முதலீடு செய்யலாம்.
சந்தையுடன் இணைக்கப்படாத திட்டம் என்பதால் உங்களது முதலீடும் குறையாது கூடுதலாக வட்டியும் கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒருவர் குறைந்தபட்சம் ரூ.1,000இல் இருந்து முதலீட்டை தொடங்க முடியும். ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் ரூபாய் வரை ஒருவர் முதலீடு செய்யலாம். இதுவே கூட்டுக் கணக்காக இருந்தால் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தில் அதிகபட்ச லாக் இன் காலம் என்பது ஐந்து ஆண்டுகள்.
இந்த திட்டத்தின் விதிகளின்படி கணக்கு தொடங்கி ஓராண்டு முடியும் வரை பணத்தை திரும்ப பெற முடியாது. ஒருவேளை லாக்கின் காலத்திற்கு முன்பு பணத்தை திரும்ப பெற விரும்பினால் குறிப்பிட்ட தொகையை அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும்.
கணக்கு தொடங்கிய மூன்று ஆண்டுகளில் பணத்தை எடுக்க விரும்பினால் பிரின்சிபல் தொகையிலிருந்து 2% கழிக்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்குள் பணத்தை திரும்ப பெற்றால் பிரின்சிபில் தொகையிலிருந்து 1% திரும்ப பெற்றுக் கொள்ளப்படும்.
இந்த முதலீட்டை வருமான வரி பிரிவின் 80சி-இன் கீழ் காட்டி வரிச்சலுகை எதையும் பெற முடியாது. இந்தியாவின் எந்த ஒரு அஞ்சல் நிலையங்களிலும் இந்த கணக்கை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். இந்திய குடிமகன்கள் அனைவருமே இதில் கணக்கை தொடங்கலாம் அதேபோல 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோர் அல்லது கார்டியன் கணக்கை தொடங்க முடியும். அந்த குழந்தை 18 வயது நிறைவடைந்த பின்னர் அதில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
கணக்கு தொடங்குவது எப்படி?: இந்த திட்டத்தில் கணக்கினை தொடங்குவதற்கு அடையாளச் சான்று மற்றும் முகவரி சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். வீட்டின் அருகே உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று ஒரு சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும் அல்லது இந்தியா போஸ்ட் இணையதளத்தில் சென்று இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அடிப்படை தகவல்களை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளை இணைத்து அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களை சரி பார்ப்பதற்காக உண்மையான சான்றிதழ்களையும் கையில் கொண்டு செல்லுங்கள்.
உங்களது பெயர் பிறந்த தேதி மொபைல் எண் மற்றும் நாமினி ஆகிய விவரங்கள் சரிபார்க்கப்படும் முதன்முறையாக குறைந்தபட்சம் ரூ.1,000 பணம் செலுத்த வேண்டியிருக்கும். இதனை ரொக்கமாகவோ அல்லது காசோலையாகவோ வழங்கலாம். உங்களுக்கான வட்டியானது மாதாந்திர அடிப்படையில் உங்களது கணக்கிலேயே வரவு வைக்கப்படும்.
Story Written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications