IPO பரபரப்புக்கு மத்தியில் பெரிய தலைகள் கூடும் TATA SONS கூட்டம்! மீண்டும் பவர்சென்டராக மாறுவாரா சந்திரசேகரன்!

இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக கூட்டம் இன்று பல நெருக்கடிக்கு மத்தியில் நடக்க உள்ளது. இன்றைய கூட்டத்தில் 3 முக்கியமான விஷயங்கள் குறித்து முக்கியமான விவாதம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் விஷயம் டாடா சன்ஸ் தலைவர் பதவிக்கு யாரை தேர்வு செய்வது, எப்படி தேர்வு செய்வது என்பது குறித்தானது. கடந்த மாதம் திட்டமிடப்பட்ட கூட்டத்தில் போதுமான உறுப்பினர்கள் வர முடியாத காரணத்தால் இதுக்குறித்து ஆலோசனை செய்ய முடியாத நிலையில் இன்றைய கூட்டத்தில் முக்கியதுவம் பெற்றுள்ளது.

IPO பரபரப்புக்கு மத்தியில் பெரிய தலைகள் கூடும் TATA SONS கூட்டம்! மீண்டும் பவர்சென்டராக மாறுவாரா சந்திரசேகரன்!

டாடா சன்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும் என ஆர்பிஐ அறிவித்திருக்கும் வேளையில், சரியான தலைமை இருந்தால் மட்டுமே இதை முறையாக கையாண்டு பட்டியலிடுவதில் இருந்து தப்பிக்க முடியும். இதேவேளையில் கடந்த வாரம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முக்கிய கமிட்டி மீண்டும் சந்திரசேகரனை பணியில் நியமிக்க வேண்டும், இதேபோல் அவருடைய பதவி நீட்டிப்பு நிராகரிப்பு கோரிக்கையை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்திருந்தது.

ஆனால் இறுதி முடிவு டாடா டிரஸ்ட் அமைப்புகளும், சந்திரசேகரன் மட்டும் தான் எடுக்க முடியும் என்பதால் இன்றைய கூட்டத்தில் சந்திரசேகரனின் மறுநியமனம் அல்லது புதிய தலைவரை சேர்வு செய்யும் பணி குறித்து முக்கிய விவதமாக மாறும்.

2வது விஷயம் ஆர்பிஐ விதிகள் படி ஒவ்வொரு நிறுவனத்திலும் அப்பர் லேயர் nbfc நிறுவனங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கும் மார்ச் 2024ல் டாடா சன்ஸ் தனது 21000 கோடி ரூபாய் கடனை செலுத்திவிட்டு CIC உரிமத்தை திருப்பி கொடுத்தது. ஆனால் ஆர்பிஐ இதை ஏற்க மறுத்து டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

இதேபோல் டாடா குழுமத்தின் உயர்மட்ட குழுவிற்கும், டாடா டிரஸ்ட் அமைப்பிற்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து தனியார் நிறுவனமாகவே இருக்க வேண்டும் என்ற திட்டம் இருக்கும் காரணத்தால் ஆர்பிஐ விதிகளை சமாளிப்பது எப்படி, தொடர்ந்து தனியார் நிறுவனமாக இருப்பது எப்படி என்பதை முடிவு செய்யவும், நடவடிக்கைகள் எடுக்கவும் உரிய தலைவர் கட்டாயம் தேவை.

இது டாடா டிர்ஸ்ட் அமைப்புகளின் தலைவராக இருக்கும் நோயல் டாடா மற்றும் சந்திரசேகரன் மத்தியில் இருக்கும் cold war காட்டிலும் முக்கியமானது என்பதால் இதை தான் டாடா சன்ஸ் இக்கூட்டத்தில் முக்கியமானதாக கருதும்.

முன்றாவதாக சேர்மன் தேர்வு நடவடிக்கையில் இருந்து முக்கிய நிர்வாக முடிவுகள் எடுப்பது வரையில் அனைத்திற்கும் Sir Ratan Tata Trust மீது மகாராஷ்டிரா சேரிட்டி கமிஷனர் விதித்துள்ள தடை உத்தரவு பெரும் தடையாக இருக்கும் காரணத்தால் எவ்விதமான நிர்வாக முடிவுகளும் எடுக்க முடியாத வகையில் உள்ளது. இதனால் இதை சமாளிப்பது எப்படி என்ற கேள்வியும் இக்கூட்டத்தில் முக்கியமான விவாத பொருளாக இருக்கப்போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+