மத்திய அரசு பிப்.1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ள நிலையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. இதன் தொடக்க நாளான புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்ற வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் அவரை வரவேற்றனர். குடியரசுத் தலைவர் வருகையின் போது கௌரவ காவல்படை மரியாதை(கார்ட் ஆஃப் ஆனர்) அவருக்கு வழங்கப்பட்டது.
பின்னர், லோக்சபா அரங்கில் 18வது லோக்சபாவின் 7வது அமர்வு மற்றும் ராஜ்யசபாவின் 270வது அமர்வின் தொடக்க நாளில் இரு சபைகளின் உறுப்பினர்களிடையே குடியரசுத் தலைவர் உரையாற்றினார். இந்த உரை தான் பட்ஜெட் கூட்டத்தொடரின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தைக் குறிக்கிறது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்தியா 21ஆம் நூற்றாண்டின் இரண்டாம் கட்டத்துக்குள் நுழைந்துள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட அடித்தளம் வளர்ச்சியடைந்த இந்தியா (விக்சித் பாரத்) என்ற இலக்கை அடைய வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் "சமூக நீதியை உண்மையாக நடைமுறைப்படுத்துவதில் எனது அரசு உறுதியாக உள்ளது" என்று வலியுறுத்தினார். 2026ஆம் ஆண்டு நாட்டின் பயணத்தில் முக்கிய அடித்தளமாக அமையும் என்று கூறினார்.
இந்திய விண்வெளி துறையில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என்று கூறிய அவர், விண்வெளி வீரர் சுப்ஹான்ஷு சுக்லாவின் ISS பயணம் வரலாற்று நிகழ்வு என்றும், வரும் ஆண்டுகளில் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் கட்டப்படும் என்றும் தெரிவித்தார். ககன்யான் திட்டம் நடைபெறுவதாகவும், விண்வெளி சுற்றுலா இந்தியர்களுக்கு கிடைக்கும் தூரத்தில் உள்ளது என்றும் வலியுறுத்தினார்.
ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பாராட்டிய குடியரசுத் தலைவர், காமாக்யா-ஹவுரா இடையேயான புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இந்திய ரயில்வேயின் சாதனை என்று குறிப்பிட்டார். நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயங்குவதாகவும், ரயில்வே 100% மின்மயமாக்கல் நோக்கத்தை நெருங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 2.5 கோடி ஏழை நோயாளிகள் இலவச சிகிச்சை பெற்றதாகவும், மொத்தம் 11 கோடிக்கும் மேற்பட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகவும் கூறினார். நாடு முழுவதும் 1.80 லட்சம் ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்கள் மூலம் மக்களுக்கு வீட்டுக்கு அருகில் சிகிச்சை கிடைப்பதாகவும் வலியுறுத்தினார்.
மேலும் நேரடி நன்மை பரிமாற்றம் (DBT) மூலம் கடந்த ஒரு ஆண்டில் ரூ.6.75 லட்சம் கோடிக்கும் மேல் நன்மைகள் நேரடியாக பயனாளிகளுக்கு சென்றுள்ளதாகவும், ஊழல் மற்றும் கசிவுகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வருமான வரிச் சட்டத்தில் மாற்றம் செய்து ரூ.12 லட்சம் வரை வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதை வரலாற்று முடிவு என்று குறிப்பிட்டார். ஜிஎஸ்டி 2.0 மூலம் ரூ.1 லட்சம் கோடி சேமிப்பு ஏற்பட்டதாகவும் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், இது இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவை துறைகளுக்கு புதிய வளர்ச்சியை அளிக்கும் என்றும் தெரிவித்தார். இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வின் இந்த உரை பட்ஜெட் அமர்வின் தொடக்கத்தைக் குறிக்கிறது. பிப்.1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications