காஷ்மீர்: காஷ்மீரின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 19ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார். இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பிரதான திட்டமாக வந்தே பாரத் ரயில் திட்டம் பார்க்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வந்தே பாரத் ரயில் சேவைகளுக்கு மக்களிடையே சிறந்த வரவேற்பு இருக்கிறது. இதனை அடுத்து காஷ்மீரிலும் முதன்முறையாக வந்தே பாரத் ரயில் சேவை கொண்டு வரப்பட இருக்கிறது.

இதன்படி ஜம்மு -காத்ரா- ஸ்ரீநகர் ஆகிய மூன்று நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட இருக்கிறது. தற்போதைக்கு ஜம்மு ரயில் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் காத்ராவிலிருந்து ஸ்ரீநகர் வரை மட்டுமே முதல் கட்டமாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டவுடன் இந்த பாதையில் முழுமையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின் 272 கிலோமீட்டர் நீளத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்று வருவதற்காக உத்தம்ப்ய்ய்ர் -ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக அது முடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். காத்ரா - பாரமுல்லா வரையிலான பாதையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சோதனை இயக்கம் வெற்றிகரமாக முடிந்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
இதனை அடுத்து ரயில்வே பாதுகாப்புத்துறை ஆணையரும் இந்த பகுதியில் பயணம் செய்து காத்ராவிலிருந்து காஷ்மீர் வரையில் ரயில்களை இயக்க அனுமதி தந்துள்ளார் . வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையிலான பயண நேரம் கணிசமான அளவு குறைகிறது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 19ஆம் தேதி காஷ்மீரின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பார் என அறிவித்துள்ளார். இதற்காக 19ஆம் தேதி உத்தம்பூருக்கு வருகை தரும் பிரதமர் மோடி உலகின் உயரமான ரயில்வே பாலத்தை பார்வையிட்டு பொது பயன்பாட்டிற்கு திறந்து விடுவார் என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காத்ராவிலிருந்து வந்தே பாரத் ரயில் சேவையை அவர் கொடி அடைத்து தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீருக்கு நீண்ட காலமாக ரயில் இணைப்பு வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். இந்த வந்தே பாரத் ரயில் சேவை காஷ்மீர் மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது. 1997 ஆம் ஆண்டிலிருந்து காஷ்மீருக்கு ரயில் இணைப்பு திட்டத்தை கொண்டுவர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் புவியியல் ரீதியாக பல்வேறு சவால்கள் இருந்ததால் அது தொடர்ந்து தாமதமாகி வந்தது. தற்போது வெற்றிகரமாக அந்த பணி முடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ரயில் பாதையில் 119 கிலோமீட்டர் தொலைவிற்கு 38 சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் டி-49 எனப்படும் சுரங்கப்பாதை அதிகபட்சமாக 12.75 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. இந்தியாவிலேயே சுரங்கத்தில் செல்லக்கூடிய மிக நீண்ட ரயில் பாதை என்ற பெருமை இதற்கு உண்டு. இது தவிர இந்த ரயில் பாதையில் 13 கிலோமீட்டர் தொலைவிலான 927 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன .
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications