டெல்லி: ET உலகளாவிய வணிக உச்சி மாநாட்டில கலந்து கொண்ட பிரதமர் மோடி, உலக பொருளாதாரம் கடினமான கட்டத்தை கடந்து வருகிறது.
ஆனால் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவானவை. மேலும் கொள்கைகள் தெளிவாக உள்ளன.
அவை கிட்டதட்ட பொருளாதாரத்தின் இலக்கை இரட்டிபாக்கும். 5 டிரில்லியன் டாலர் இலக்கினை அடைய உதவும் என்றும் கூறியுள்ளார்.
உத்தரவாதமின்றி கடன்
மேலும் இந்தியா ஒரு நிலையான மாதிரியை அடைய உதவும் என்றும் கூறியுள்ளார். முத்ரா திட்டத்தின் கீழ் முதன் முறையாக தொழில் முனைவோருக்கு வங்கி உத்தரவாதமின்றி 11 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. தனியார் துறைக்கு பொருளாதாரத்தின் கூடுதல் துறைகளை அரசாங்கம் திறந்து வைக்கிறது என்றும் மோடி கூறியுள்ளார்.
முதலீடுகள் அதிகரிப்பு
மேலும் எளிமைப்படுத்துதல், பகுத்தறிவும் மற்றும் வெளிப்படைதன்மை ஆகியவை வங்கி, அன்னிய நேரடி முதலீடு, அல்லது இயற்கை வள திறப்பதற்கான ஒதுக்கீடுகளாகும். 2019ம் ஆண்டில் இந்தியாவுக்கு 48 பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீடு கிடைத்தது. இது 16% வளர்ச்சியாகும்.இதே போல் தனியார் பங்கு மற்றும் துணிகர மூலதன முதலீடு 53% வளர்ச்சியைக் கண்டு 19 பில்லியன் அமெரிக்கா டாலர்களைக் கண்டுள்ளது.
அனைவரும் நண்பர்கள்
நாங்கள் ஒரே நேரத்தில் சவுதி அரேபியா மற்றும் ஈரானின் நண்பர்கள். அதே நேரத்தில் அமெரிக்கா ரஷ்யாவுடனும் நண்பர்களாக இருக்கிறோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒர் நிகழ்வில் சவுதி அரேபிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகின்றன என்று கூறியது கவனிக்கதக்கது.
நம்பிக்கை
இந்தியாவின் வளர்ச்சி 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ள இந்த நிலையில், அடுத்து வரும் நிதியாண்டில் இருக்கும் வளர்ச்சியாவது இருக்குமா? இல்லை என்ற சந்தேகத்தின் மத்தியில், தற்போது கொரோனா வைரஸூம் சேர்ந்து கொண்டுள்ளது. இன்னும் எவ்வவெல்லாம் இந்திய பொருளாதாரத்தினை செய்யப் போகிறதோ என்ற எண்ணத்தின் மத்தியில், பிரதமர் மோடியின் வார்த்தைகள் சற்று நம்பிக்கையை தரும் விதமாக உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications