பொதுவாக அரசு திட்டங்கள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடத் தனியார் வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதில், ஆனால் இன்று நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் தனியார் வங்கிகளுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
புதன்கிழமை மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் அரசு வர்த்தகத்தில் ஈடுபடத் தனியார் வங்கிகளுக்கு இருக்கும் தடைகள் நீக்கப்பட உள்ளது. இதன் மூலம் இனி தனியார் வங்கிகள் அனைத்தும் அரசுத் திட்டங்கள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடலாம்.
தனியார் வங்கிகளுக்கு வாய்ப்பு
இதன் மூலம் இந்தப் பொருளாதார வளர்ச்சியில் ஈடுபட அனைத்து வங்கிகளுக்கும் சமமான வாய்ப்புகளைப் பெறும், இதன் மூலம் வாடிக்கையாளர் சேவையின் தரமும் பெரிய அளவில் உயரும் எனத் தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.
ஆக்சிஸ் வங்கி
இதற்கு முன்பு ஆக்சிஸ் வங்கி போன்ற சில வங்கிகளுக்கு மட்டுமே அரசுத் திட்டங்கள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து தனியார் வங்கிகளும் ஈடுபட முடியும். இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளும் ஈடுபட முடியும் எனக் கூறப்படுகிறது.
உதய் கோட்டாக்
இதுகுறித்து இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான கோட்டாக் மஹிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோட்டாக் கூறுகையில், மத்திய நிதியமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது மிகவும் முற்போக்கான சீர்திருத்தம். இதன் மூலம் தனியார் வங்கிகள் நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய அளவிலான பங்குகொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
வங்கி பங்குகள் உயர்வு
இந்த அறிவிப்பின் எதிரொலியாக இன்று ஹெச்டிஎப்சி வங்கி 5 சதவீதமும், ஆக்சிஸ் வங்கி 4.6 சதவீதமும், ஆர்பஎல் வங்கி 4.38 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 4.1 சதவீதமும், பெடரல் வங்கி 4.06 சதவீதமும், கோட்டாக் மஹிந்திரா வங்கி 2.18 சதவீதமும், இண்டஸ்இந்த் வங்கி 2.04 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.