கடன் வாங்க புதிய வழி.. தனியார் வங்கிகளின் புதிய ஐடியா..!

தற்போது சிறு கடன்களை வாங்க வேண்டும் என்றாலும் அதற்காக நாம் வங்கிகளுக்கோ அல்லது நிதி நிறுவனங்களுக்கோ செல்ல வேண்டி இருக்கிறது. இனி அந்த பிரச்சினை இருக்காது. ஏனெனில் யுபிஐ செயலிகள் வாயிலாக கடன் வழங்குவதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதில் வங்கிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்தியாவில் தற்போது யுபிஐ செயலிகளை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது . அந்த வகையில் யுபிஐ செயலிகள் வாயிலாக கடன்களை வழங்குவது செலவு குறைந்த மற்றும் அதிக அளவிலான வாடிக்கையாளர்களை சென்று சேரக்கூடிய ஒரு நடைமுறையாக இருக்கும் என தனியார் வங்கிகள் முடிவெடுத்துள்ளன.

கடன் வாங்க புதிய வழி.. தனியார் வங்கிகளின் புதிய ஐடியா..!


இதன்படி ஃபிக்சட் டெபாசிட்டை உத்திரவாதமாகக் கொண்டு யுபிஐ செயலிகள் வாயிலாக கடன்களை வழங்குவதற்கான நடைமுறைகளை தனியார் வங்கிகள் துவங்கியுள்ளன. நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இதுவரை யுபிஐ சேவை வழியாக தனியார் வங்கிகள் கடன் வழங்கும் நடைமுறையை தொடங்கவில்லை என்றாலும் வங்கிகள் தங்கள் கட்டமைப்புகளில் இதற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கிவிட்டன.

இந்த நடைமுறை வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வரும்போது புதிதாக வங்கிகளை நோக்கி வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கிரெடிட் ஹிஸ்டரி அதாவது கடன் வரலாறு இல்லாமலேயே ஃபிக்ஸடு டெபாசிட் போன்றவற்றை அடமானங்களாக எடுத்துக் கொண்டு சிறிய அளவிலான கடன்களை யுபிஐ வாயிலாக வங்கிகள் வழங்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் படி ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் ஃபிக்ஸடு டெபாசிட்களுக்கு எதிரான கடன் அளவு 1,294 கோடி ரூபாயாக இருக்கிறது. இதுவே கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 797 கோடி ரூபாயாக இருந்தது.

அதாவது வாடிக்கையாளரின் டெபாசிட்டுகளை அடமானமாகக் கொண்டு வங்கிகள் கடன்களை வழங்கும் நடவடிக்கைகளை அதிகப்படுத்தி இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. பொதுவாக கடன் வரலாறு இல்லாத புதிய வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன. எனவே அவர்களை வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு அனுப்புகின்றன. அங்கே அவர்கள் கடன் பெறும் போது அவர்களின் கடன் வரலாறு என்பது நிறுவப்படுகிறது.

பேங்க் ஆப் பரோடாவின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னவிஸ், இந்த நடைமுறை நன்றாக வேலை செய்யும் பட்சத்தில் வங்கிகள் ஃபின் டெக் வாயிலாக கடன் அட்டைகளை விற்கலாம். அதனை தனிநபர் கடன்கள், வாகன கடன்கள் மற்றும் பலவற்றுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறுகிறார். இவ்வாறு கடன்களை வழங்கும்போது வங்கிகள் சார்பில் செய்ய வேண்டிய செலவினங்கள் குறைகின்றன. சில வங்கியில் இதற்காக பின்டெக் அல்லது வங்கி நிதி சார் வங்கி சாராத நிதி நிறுவனங்களோடு இணைந்து செயல்படலாம் என சொல்லப்படுகிறது.

அதாவது இந்த கடன்களுக்கான உத்திரவாதங்களை வங்கிகளை அளிக்கும் ஆனால் கடன்களை விநியோகிக்கும் செயல்முறைகளை ஃபின்டெக் நிறுவனங்கள் மேற்கொள்ளும். தற்போது வங்கிகள் மட்டுமே யுபிஐ மூலம் கடன் வழங்க முடியும். ஃபின்டெக் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களும் இதில் களமிறங்க திட்டமிட்டுள்ளன ஆனால் வங்கி தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.


Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+