தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஐந்து நாட்களே இருக்கின்றன. பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது, இனிப்புகளை வழங்குவது, பரிசுகளை வழங்குவது என பிஸியாக இருக்கின்றன. சமூக வலைத்தளங்கள் எங்கும் நிறுவனங்கள் வழங்கிய கிப்ட் பாக்ஸ்களை பலரும் பகிர்ந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தில் ஒரு கணிசமான தொகையை தீபாவளிக்கான போனஸ் தொகையாக வழங்கும். சில நிறுவனங்கள் போனஸ் தொகையோடு சேர்ந்து பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட ஏதுவாக விடுமுறையோடு சேர்த்து இனிப்பு உள்ளிட்ட பலகாரங்களையும் வழங்கி ஊழியர்களை மகிழ்விக்கும்.

அப்படி ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கிய கிப்ட் பாக்ஸ் சமூக வலைத்தளங்கள் என்றும் ஆக்கிரமித்து இருக்கிறது. Naukri போன்ற தளங்களை நடத்தி வரக்கூடிய info edge நிறுவனம் நொய்டாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கியிருக்கிறது . ஊழியர்கள் இதனை instagram பக்கத்தில் பதிவு செய்து வைரலாக்கி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய ஒவ்வொரு ஊழியருக்கும் விஐபி சூட்கேஸ் மற்றும் ஒரு பெட்டி நிறைய தின்பண்டங்களும், விளக்குகளும் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றன. இதனை பல்வேறு ஊழியர்களும் மகிழ்ச்சியுடன் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கின்றனர். ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் ஆன முறையில் இந்த தீபாவளி பரிசினை நிறுவனம் வழங்கியிருக்கிறது.
ஊழியர்கள் டெஸ்கில் விஐபி சூட்கேஸ் மற்றும் தின்பண்டங்கள் பெட்டி மற்றும் ஒரு விளக்கு கொண்டு அலங்கரிக்கப்பட்டு அவர்களின் சம்பந்தப்பட்ட இருக்கைகளில் வைத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. காலையில் வழக்கம் போல வேலைக்கு வந்த ஊழியர்கள் இவற்றைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . தாங்கள் அலுவலகத்திற்கு சென்று சர்ப்பிரைசாக இந்த தீபாவளி கிஃப்ட்டை பார்ப்பது அதற்குள் என்ன இருக்கிறது என்பதை திறந்து பார்ப்பது என்பன உள்ளிட்ட வீடியோக்களையும் அவர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியோடு பதிவு செய்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டு இதே நிறுவனம் ஊழியர்களுக்கு ஏர் ஃபிரையரை பரிசாக வழங்கியது. இந்த முறை விஐபி சூட்கேஸ்களை பரிசாக கொடுத்திருக்கிறது. பல ஊழியர்களும் இந்த தீபாவளி பரிசினை எதிர்பார்க்கவில்லை என மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் பலரும் இப்படி ஒரு நிறுவனத்தில் தான் வேலை செய்ய வேண்டும் என இன்ஃபோ எட்ஜ் நிறுவனத்தை பாராட்டி வருகின்றனர்.
தீபாவளி என்பது நாடு முழுவதும் அனைவருக் உற்சாகம் பொங்க கொண்டாடும் ஒரு பண்டிகை. அரசு தங்கள் ஊழியர்களுக்கு தீபாவளிக்காக போனஸ் வழங்குகிறது. தனியார் நிறுவனங்களை பொறுத்தவரை ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே ஊழியர்களுக்கு போனஸ், பரிசு உள்ளிட்டவற்றை கொடுத்து அசத்துகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் போனஸ் கூட வழங்குவதில்லை.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications