கொரோனா தொற்று நாட்டு மக்களை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது, ஒருபக்கம் வேலைவாய்ப்பு இழப்பு, வருமானம் இழப்பு, மறுபக்கம் கொத்துக்கொத்தாக உயிரிழப்பு. இந்நிலையில் கொரோனா தொற்று மூலம் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு லைப் இன்சூரன்ஸ் அல்லாத 4 பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 10 லட்சம் ரூபாய் அளவிலான தொகையைக் கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பைப் பலகட்ட ஆலோசனை மூலம் அனைத்திந்திய ஜெனரல் இன்சூரன்ஸ் ஊழியர்கள் அமைப்பு (GIEAIA) அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பல குடும்பங்களுக்கு ஆறுதலாக உள்ளது.
10 லட்சம் ரூபாய்
இதுகுறித்து லைப் இன்சூரன்ஸ் அல்லாத 4 இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஒன்றான ஓரியென்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா தொற்று மூலம் உயிரை இழந்த ஊழியரின் குடும்பம் அல்லது நாமினிக்கு ரூபாய் 10 லட்சம் தொகையை அளிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
ஊழியரின் குரூப் மெடிகிளைம் திட்ட
இதுமட்டும் அல்லாமல் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ஊழியர் / துணைவியர் / குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகியோருக்கான கொரோனா சிகிச்சைக்கு ஊழியரின் குரூப் மெடிகிளைம் திட்டத்தில் கிளைம் செய்யப்பட்ட தொகையைத் தாண்டி செலவு செய்யப்பட்ட தொகையும் திருப்பி அளிக்கப்படும் ஓரியென்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் எனத் தெரிவித்துள்ளது.
ஊழியர்களுக்கு நன்மை
இந்தத் திட்டம் ஏற்கனவே கொரோனா மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் அல்லாமல் இனி வரும் காலத்தில் பாதிக்கப்படுவோருக்கும் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது ஓரியென்டல் இன்சூரன்ஸ் நிறுவனம். இந்த அறிவிப்பு அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கு நன்மை அளிக்கும்.
4 இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
லைப் இன்சூரன்ஸ் அல்லாத 4 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பட்டியலில் ஓரியென்டல் இன்சூரன்ஸ் நிறுவனம், தி நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, தி நியூ இந்தியா அசூரன்ஸ் கம்பெனி, தி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகியவை ஆகும். மேலே குறிப்பிட்ட சலுகை 4 நிறுவன ஊழியர்களுக்கும் பொருந்தும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications