கொரோனா தொற்று நாட்டு மக்களை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது, ஒருபக்கம் வேலைவாய்ப்பு இழப்பு, வருமானம் இழப்பு, மறுபக்கம் கொத்துக்கொத்தாக உயிரிழப்பு. இந்நிலையில் கொரோனா தொற்று மூலம் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு லைப் இன்சூரன்ஸ் அல்லாத 4 பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 10 லட்சம் ரூபாய் அளவிலான தொகையைக் கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பைப் பலகட்ட ஆலோசனை மூலம் அனைத்திந்திய ஜெனரல் இன்சூரன்ஸ் ஊழியர்கள் அமைப்பு (GIEAIA) அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பல குடும்பங்களுக்கு ஆறுதலாக உள்ளது.
10 லட்சம் ரூபாய்
இதுகுறித்து லைப் இன்சூரன்ஸ் அல்லாத 4 இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஒன்றான ஓரியென்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா தொற்று மூலம் உயிரை இழந்த ஊழியரின் குடும்பம் அல்லது நாமினிக்கு ரூபாய் 10 லட்சம் தொகையை அளிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
ஊழியரின் குரூப் மெடிகிளைம் திட்ட
இதுமட்டும் அல்லாமல் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ஊழியர் / துணைவியர் / குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகியோருக்கான கொரோனா சிகிச்சைக்கு ஊழியரின் குரூப் மெடிகிளைம் திட்டத்தில் கிளைம் செய்யப்பட்ட தொகையைத் தாண்டி செலவு செய்யப்பட்ட தொகையும் திருப்பி அளிக்கப்படும் ஓரியென்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் எனத் தெரிவித்துள்ளது.
ஊழியர்களுக்கு நன்மை
இந்தத் திட்டம் ஏற்கனவே கொரோனா மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் அல்லாமல் இனி வரும் காலத்தில் பாதிக்கப்படுவோருக்கும் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது ஓரியென்டல் இன்சூரன்ஸ் நிறுவனம். இந்த அறிவிப்பு அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கு நன்மை அளிக்கும்.
4 இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
லைப் இன்சூரன்ஸ் அல்லாத 4 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பட்டியலில் ஓரியென்டல் இன்சூரன்ஸ் நிறுவனம், தி நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, தி நியூ இந்தியா அசூரன்ஸ் கம்பெனி, தி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகியவை ஆகும். மேலே குறிப்பிட்ட சலுகை 4 நிறுவன ஊழியர்களுக்கும் பொருந்தும்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications