பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஜூன் 27ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓய்வூதியம் மற்றும் வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 27ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்யப் போவதாக பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் நேற்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AIBOC), அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) மற்றும் வங்கி ஊழியர்களின் தேசிய அமைப்பு (NOBW) உள்ளிட்ட ஒன்பது வங்கி சங்கங்களின் கூட்டு அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன் (UFBU) வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.
ஓய்வூதியம்
அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியத்தைப் புதுப்பித்தல் மற்றும் திருத்துதல் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் மற்றும் அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பது ஆகியவை வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளாக உள்ளது என UFBU கூட்டத்திற்குப் பிறகு AIBEA பொதுச் செயலாளர் C H வெங்கடாசலம் அவர்கள் தெரிவித்தார்.
வேலைநிறுத்தம்
AIBOC பொதுச் செயலாளர் சௌமியா தத்தா இந்த வேலைநிறுத்தம் குறித்து கூறுகையில், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அரசும் வங்கிகளின் நிர்வாகமும் அக்கறையில்லாமல் இருந்தால், நாடு முழுவதும் உள்ள சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்றார்.
புதிய ஓய்வு திட்டம்
புதிய ஓய்வு திட்டத்தை எதிர்ப்பது ஏன் என்றும் வங்கி ஊழியர்கள் சங்கம் விளக்கியுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தில், ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படாத நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தில், ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுவதோடு, 14 சதவீத பங்கு அரசாங்கத்தால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
பங்குச்சந்தை
புதிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தை அடிப்படையிலானது என்பதால் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப ஓய்வூதியம் அமையும். மேலும் புதிய திட்டத்தில் ஜிபிஎஃப் வசதி இல்லை என்பதும், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் நிலையான ஓய்வூதியத்துக்கு உத்தரவாதம் இல்லை என்பதும் வங்கி ஊழியர்களின் எதிர்ப்புகளுக்கு காரணமாக உள்ளது.
தனியார்மயம்
அதேபோல் பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கும் போது பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் என்றும், இந்தியா முழுவதும் அனைத்து துறையிகளிலும் பணப்புழக்கம் பாதிக்கப்படும் என்றும், ஊரக வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிப்புகளை சந்திக்கும் என்றும் AIBOC அமைப்பின் தலைவர் சஞ்சய் தாஸ் கூறியுள்ளார்.
வங்கி பணிகள்
ஜூன் 27 முதல் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக மிரட்டி உள்ளதால் ஜூன் 27க்கு முன்பு பொதுமக்கள் வங்கி சம்பதமான பணிகளை முன்கூட்டியே முடித்து சுதாரித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications