தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுச்சேரியில் பாஜக கூட்டணியின் சார்பில் முதல்வர் ரங்கசாமி ஆட்சி நடத்தி வருகிறார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி சமீபத்தில் சட்டமன்றத்தில் புதுச்சேரி மாநில பட்ஜெட்டை சமர்ப்பித்தார் என்பதும் அதில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் CAG அறிக்கைப்படி புதுச்சேரியின் கடன் நிலுவை தொகை 10 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியின் நிலுவைக்கடன்
யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் நிலுவையில் உள்ள கடன் 2020-21ல் ரூ. 10,000 கோடியைத் தாண்டியுள்ளது என்று CAG என்று கூறப்படும் இந்தியக் கட்டுப்பாட்டாளர் மற்றும் தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை தெரிவித்துள்ளது. மார்ச் 2021ஆம் ஆண்டில் முடிவடைந்த புதுச்சேரி யூனியன் பிரதேச நிதி குறித்த அறிக்கையை CAG வெளியிட்டுள்ள நிலையில் அதில் தான் இந்த அதிர்ச்சி தகவல் உள்ளது.
ரூ.10,894 கோடி கடன்
கடந்த 2016-17ஆம் ஆண்டில் ரூ.8,299 கோடியாக இருந்த கடன் 2020-21ஆம் ஆண்டில் ரூ.10,894 கோடியாக அதிகரித்துள்ளதாக முதல்வர் என் ரங்கசாமி திங்கள்கிழமை சபையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே காலகட்டத்தில் புதுச்சேரியின் வளர்ச்சி விகிதம் 7.03% லிருந்து 15.29% ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வருவாய் பற்றாக்குறை
2020ஆம் ஆண்டில் புதுச்சேரியின் வருவாய் வரவுகள் ரூ.5,890 கோடி ஆகும். இது முந்தைய ஆண்டை விட ரூ.891 கோடி குறைவு. இதன் காரணமாக 2019-20ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.55 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.1,370 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிப்பற்றாக்குறை
2019-20ஆம் ஆண்டில் ரூ.381 கோடியாக இருந்த நிதிப்பற்றாக்குறை 2020-21ஆம் ஆண்டில் ரூ.1,615 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீட்டு பற்றாக்குறைக்கு பதிலாக ரூ.742 கோடியை மீண்டும் கடனாக வழங்கியது.
ரூ.212.95 கோடி முடக்கம்
பொதுப்பணித்துறை மற்றும் மின்சாரத்துறையால் முழுமை பெறாத 58 திட்டங்களில் ரூ.212.95 கோடி முடக்கப்பட்டுள்ளது என CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 462.25 கோடி மதிப்பிலான 788 திட்டங்களின் பயன்பாட்டுச் சான்றிதழ்களை அரசு சமர்ப்பிக்கவில்லை என்றும், 9 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.39.88 கோடி மதிப்பிலான 226 திட்டங்களுக்கு பயன்பாட்டு சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி
கடந்த ஐந்து ஆண்டுகளாக 17 அமைப்புகள் வருடாந்திர கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை என்றும், பல்வேறு துறைகளில் ரூ.28.05 கோடி அரசுப் பணம் முறைகேடு, நஷ்டம், திருட்டு ஆகியவற்றால் மோசடி செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்காக 2021 மார்ச் வரை 321 வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் CAG அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரூ.62.43 கோடி இழப்பு
கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை புதுச்சேரியில் 13 அரசு நிறுவனங்கள் இருந்தன. இந்த பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த முதலீடு ரூ.738.03 கோடி. இவற்றில் 6 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.35.07 கோடி லாபம் ஈட்டியுள்ளன. ஆனால் 6 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.62.43 கோடி இழப்பை சந்தித்துள்ளதால் ஒட்டுமொத்தமாக ரூ.27.36 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக CAG அறிக்கை கூறுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications