புதுச்சேரியில் உள்ள ஒரு முன்னணிப் பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் உட்பட 7 பேரும் சேர்ந்து சுமார் ரூ.90 கோடி மதிப்புள்ள பெரிய அளவிலான கிரிப்டோ கரன்சி பண மோசடிக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறையின் விசாரணையில், இந்த கல்லூரி வளாகம், சைபர் குற்றவாளிகளின் பணப் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் முக்கிய இடமாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது. மாணவர்கள், தங்கள் நண்பர்கள் மற்றும் வகுப்பு தோழர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று, அவற்றை மோசடி கும்பலுக்கு விற்பனை செய்துள்ளனர்.
மேலும், இந்த மோசடி மூலம் பெறப்பட்ட பணம் இந்த கணக்குகளுக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து துபாய் மற்றும் சீனா போன்ற நாடுகளில் உள்ள சர்வதேச கிரிப்டோ கரன்சி வழிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மோசடி வெளிச்சத்துக்கு வர முக்கிய காரணமே இரண்டு மாணவர்கள் தான்.

தினேஷ் மற்றும் ஜெயப்பிரதாப் என்ற இரண்டு பொறியியல் மாணவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகள் எந்த முன் அறிவிப்பும் இன்றி முடக்கப்பட்டதாக புகார் அளித்தபோது தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இவர்கள் இருவரும் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை ஹரிஷ் என்ற நண்பருடன் பகிர்ந்திருந்தனர். ஹரிஷ், இதேபோன்று மேலும் 20 மாணவர்களிடம் இருந்து விவரங்களை சேகரித்துள்ளார். இந்தக் கணக்குகள் மூலம் மட்டும் சுமார் ரூ.7 கோடி பணம் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரை, 4 பொறியியல் பட்டதாரிகள் உட்பட மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தாமஸ், ஹரிஷ், கணேசன், கோவிந்தராஜ், யாஷ்வின், ராகுல் மற்றும் அய்யப்பன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து, போலீசார் இவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், 171 காசோலை புத்தகங்கள், 75 ஏடிஎம் கார்டுகள், 20 மொபைல் போன்கள், லேப்டாப்கள், பல வங்கிக் கணக்குப் புத்தகங்கள், கிரெடிட் கார்டுகள் மற்றும் ஒரு சொகுசு கார் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இந்த கும்பலின் முக்கியக் குற்றவாளியான கணேசன் என்பவர், சீன இணைய குற்றவாளிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்துள்ளார். இவர், எடுக்கப்பட்ட பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி, டெலிகிராம் செயலி மூலம் அனுப்பி, அதற்கு கமிஷனாகப் பெரிய தொகையை பெற்று வந்துள்ளார்.
இந்த மோசடி சம்பவம் குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் பிரிவின் மூத்த காவல் கண்காணிப்பாளர் (IPS) நித்யா ராதாகிருஷ்ணன் கூறுகையில், "நாங்கள் வெறும் வங்கிக் கணக்கு வைத்திருந்தவர்களை மட்டும் கைது செய்யாமல், பணமோசடியில் ஈடுபட்டவர்களை பிடித்தது முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த வலைப்பின்னல்கள் எவ்வளவு திட்டமிட்டதாகவும், உலகளாவியதாகவும் மாறியுள்ளன என்பதையே இது காட்டுகிறது" என்று தெரிவித்தார்.
காவல்துறை எச்சரிக்கை : புதுச்சேரி காவல்துறை பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள், ஏடிஎம் அட்டைகள் அல்லது ஆன்லைன் வங்கி தகவல்களை நண்பர்கள் உட்பட யாருடனும் பகிரவோ அல்லது மற்றவர்கள் தங்கள் கணக்குகளை இயக்க அனுமதிக்கவோ கூடாது. இதுபோன்ற செயல்கள் கடுமையான சட்ட மற்றும் நிதிப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!



Click it and Unblock the Notifications