சிபிஐ அதிகாரி போல நடித்து.. சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.40 லட்சம் திருட்டு..ஷாக்!

புனே: சிபிஐ அதிகாரி போல நடித்து புனேயில் வாகட் பகுதியைச் சேர்ந்த ஒரு சாப்ட்வேர் இன்ஜினியரிடம் இருந்து ரூ.40 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 21, 22 ஆகிய தேதிகளில் அந்த இன்ஜினியரின் வங்கிக் கணக்கில் இருந்து சட்டவிரோதமாக அந்த போலி அதிகாரி பணத்தை களவாடியுள்ளார். ஒரு டெலிகம்யூனிகேஷன் அப்ளிகேஷன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு, ஒரு விடியோவை அனுப்பி சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை பற்றி விசாரிப்பதாகக் கூறி இந்த மோசடியை அந்த சைபர் கிரிமினல் நடத்தியுள்ளார்.

சிபிஐ அதிகாரி போல நடித்து.. சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.40 லட்சம் திருட்டு..ஷாக்!

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரை ஏமாற்றி அவரது மொபைல் போன் ஸ்கிரீனை ஷேர் செய்யச் சொல்லி, தனிப்பட்ட விவரங்களை கவர்ந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரை பல்வேறு நிதிப் பரிவர்த்தனைகளை செய்யச் சொல்லி அதன் மூலம் அவரது வங்கியின் ரகசிய விவரங்களைக் கைப்பற்றியுள்ளார். பின்னர் சட்டவிரோதமாக அவரது கணக்கில் இருந்து ரூ.40 லட்ச ரூபாய் திருடப்பட்டுள்ளது.

இதுபற்றி பிம்ப்ரி சிந்ச்வாடு போலீஸ் நிலைய சைபர் கிரைம் பிரிவில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

என்ன நடந்தது?: பாதிக்கப்பட்டவருக்கு மார்ச் 21 ஆம் தேதியன்று அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் ஒருவர் தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு விடியோ காலில் பேசுமாறு கூறியுள்ளார்.

அந்த அழைப்பில் போலி அதிகாரி, பாதிக்கப்பட்டவர் பெயரில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக ஒரு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கைதைத் தவிர்ப்பதற்காக ஒரு செக்யூரிட்டி டெபாசிட் செய்யுமாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் செல்போன் ஸ்கிரீனை தன்னுடன் ஷேர் செய்யுமாறு கூறியுள்ளார். அதன் மூலம் தான் சில பணப் பரிவர்த்தனைகளை சரிபார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தனது செல்போன் ஸ்கிரீனை பாதிக்கப்பட்டவர் அந்த அதிகாரியிடம் ஷேர் செய்துள்ளார். இதை வைத்து பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கின் பின் நம்பர், ஓடிபி ஆகியவற்றை பெற்ற அந்த போலி அதிகாரி மோசடியாக ரூ.40 லட்சத்தை எடுத்துள்ளார்.

தனது வங்கியில் இருந்து மோசடியாக பணம் களவாடப்பட்டதைத் தெரிந்து கொண்ட பாதிக்கப்பட்டவர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார். இதுபற்றி அவர்களும் விசாரித்து வருகின்றனர்.

அடையாளம் தெரியாத இதுபோன்ற போன்கால்களை எடுக்க வேண்டாம் என்றும் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை தெரியாதவர்களிடம் தரக் கூடாது என்று எத்தனையோ முறை அறிவுறுத்தினாலும், இதுபோன்ற படித்தவர்களே ஏமாறும் அவலங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

Story written by: Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+