மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்கு விலையானது கிட்டதட்ட 7 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
ஏன் ஒரே நாளில் 7 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது ஏன்? பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 3,688 கோடி ரூபாய் கடனை முறைகேடாக பயன்படுத்தியதாக மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படி ஒரு வீழ்ச்சியினை இந்த பங்கு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதெல்லாம் சரி யார் இவ்வளவு கடனை பெற்றுவிட்டு ஏமாற்றியது? திவான் ஹவுஸிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் மோசடி செய்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் தான், இப்படி மோசமான வீழ்ச்சியினை கண்டுள்ளது இந்த வங்கி பங்கின் விலை.
ஏற்கனவே தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வரும் DHFL நிறுவனம், இந்த முறையும் சர்ச்சனையில் சிக்கி உள்ளது. இதற்கிடையில் தான் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்கு விலையானது 34.75 ரூபாய் குறைந்து, அதாவது கிட்டதட்ட 6.7 சதவிதம் வீழ்ச்சி கண்டும் காணப்படுகிறது. இது முந்தைய நாள் முடிவு விலையில் இருந்து இந்தளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில், 3,688.58 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை பெற்று முறைகேடான முறையில் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது. டிஹெச் எஃப் எல் நிறுவனம் போலி நிறுவனத்தின் பெயரில் பல பொதுத்துறை வங்கிகளிலும் கடன் வாங்கியுள்ளதாகவும் ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் தற்போது இந்த புகாரும் வந்துள்ளது.
ஏற்கனவே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தஸிந்த் பேங்க், மற்றும் யூனியன் வங்கிகள் என பலரும் டிஹெச் எஃப் எல் நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியும் இதன் மீது புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிஹெச்எஃப்எல் நிறுவனம் ஏற்கனவே பல மோசடிகள் செய்து, பல போலியான கணக்குகள் மூலம், கடன் கொடுத்துள்ளதாகவும், அதிலும் சில கணக்குகள் இறந்தவர்களின் பெயரில் இருந்ததாகவும் முன்னதாக செய்திகள் வெளியாகின, இந்த நிலையில் தற்போது மீண்டும் இப்படி மோசடியில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications