மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்க படைகள் மத்தியில் நடக்கும் தாக்குதல் காரணமாக ஒட்டுமொத்தமாக வளைகுடா பகுதியில் விமான சேவைகளும், விமான நிலையங்களும் முடங்கியது. குறிப்பாக முக்கிய வர்த்தக நகரமாகவும் மற்றும் டிரான்சிட் நகரமாகவும் இருக்கும் துபாயில் 2 விமான நிலையங்களும் முடங்கிய நிலையில், திங்கட்கிழமை மாலை முதல் சிறிய எண்ணிக்கையில் விமான சேவைகளை துவங்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் பல ஆயிரம் வெளிநாட்டு மக்களும், வெளிநாட்டு பயணிகளும் துபாய், அபுதாபி, கத்தார், சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் மாட்டிக்கொண்டனர். இதில் தெலங்கானா விவசாய அமைச்சர் தும்மலா நாகேஸ்வர ராவ், நடிகர் அஜித் குமார், பேட்மிண்டன் சாம்பியன் பிவி.சிந்து போன்ற பலர் மாட்டிக்கொண்டனர்.

துபாய், அபுதாபி, கத்தார், சவுதி அரேபியா ஆகிய நகரங்களில் இருந்து விமான சேவைகள் முழு வீச்சில் துவங்கவில்லை என்றாலும், சிறிய எண்ணிக்கையில், அவரச காரணங்களுக்காகவும், வெளிநாட்டு பயணிகளுக்காகவும், முக்கிய சரக்கு போக்குவரத்திற்காகும் விமான சேவை நேற்று மாலையில் இருந்து இயங்க துவங்கியுள்ளது.
துபாயில் மாட்டிக்கொண்டதால் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் சாம்பியன் பிவி.சிந்து மார்ச் 3-ஆம் தேதி பிர்மிங்காமில் நடக்கவிருந்த ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை அவர் தவறவிட்டுள்ளார். மேலும் 3 நாட்கள் துபாயில் மாடிக்கொண்ட நிலையில் இன்று காலை பத்திரமாக பெங்களூரில் தரையிறங்கினார். பெங்களூரில் இறங்கியதும் முக்கிய இன்ஸ்டா பதிவை செய்தார்.
துபாயில் சிக்கியது ஏன்?
பிவி.சிந்து சனிக்கிழமை முதல் துபாயில் சிக்கியிருக்கிறார். ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்ல திட்டமிட்டிருந்த சிந்து, துபாய் விமான நிலையத்தில் ஈரான் - இஸ்ரேல் தாக்குதலுக்கு மத்தியில் மாட்டிகொண்டார். பிவி.சிந்து உடன் அவரது குழு உறுப்பினர்களும் மாட்டிக்கொண்டனர்.
உயிர் தப்பிய பிவி சிந்து
சிந்து மற்றும் அவரது பயிற்சியாளர் இர்வான்ஷா ஆதி பிரதாமா உட்பட அவரது குழு, தங்களது தங்குமிடம் அருகே ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இருந்து தப்பினர். இது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர் எனவும் பிவி சிந்து தெரிவித்தார்.
இந்த 3 நாட்கள் மிகவும் 'தீவிரமாக இருந்தது' என்று சிந்து விவரித்துள்ளார். துபாய் அதிகாரிகள் பயணிகளுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளனர் என்று பிவி சிந்து பாராட்டியுள்ளார்.

சமூக வலைதளத்தில் சிந்து பதிவு
இந்தியா திரும்பிய பிறகு சிந்து தனது எக்ஸ் கணக்கில் "பெங்களூரு திரும்பியுள்ளேன், பாதுகாப்பாகவும் இருக்கிறேன்" என்று கூறிய அவர், கடந்த 3 நாட்கள் 'தீவிரமாகவும் மற்றும் நிச்சயமற்றவையாகவும்' இருந்தது என்று விவரித்தார்.
துபாய் அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள், இம்மிக்ரேஷன் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இப்போது ஓய்வு எடுத்து, அடுத்த கட்டத்தை திட்டமிடுவேன் என்று தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார்.
More From GoodReturns

துபாய் முதல் கத்தார் வரை.. ஈரானின் திடீர் தாக்குதலால் ஷாக்.. அமெரிக்காவின் அடுத்த திட்டம் என்ன..?

பெங்களூர் மாஸ்.. ரியல் எஸ்டேட்-ல் பணத்தை போட்டவர்களுக்கு ஜாக்பாட்.. 3 வருடத்தில் இப்படியா..?

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!



Click it and Unblock the Notifications