IT துறையில் தற்போது இந்த 5 ஸ்கில் செட்டுக்குத்தான் அதிக டிமாண்ட்.. மத்ததெல்லாம் சும்மா!

சென்னை: வளர்ந்து வரும் தொழில்நுட்ப வேலைக்கு ஏற்றவாறு முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு, அதன் வருங்கால ஊழியர்களிடம் தேவைப்படும் திறன் என்ன.. என்பது குறித்த அறிக்கையை Quess Corp நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வருகிறது. மேலும் அதற்கு ஏற்றார் போல் தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்று பல பட்டதாரிகளும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது இணையதளங்களில் 'Skill Set' என்று ஆங்கிலத்தில் சொல்ல படக்கூடிய திறன்களை அதிகரிக்கவும், IT பட்டதாரிகளுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

 IT துறையில் தற்போது இந்த 5 ஸ்கில் செட்டுக்குத்தான் அதிக டிமாண்ட்.. மத்ததெல்லாம் சும்மா!

தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் AI வளர்ச்சியின் காரணமாக, தங்களுக்கு தேவைப்படும் திறன் கொண்ட பட்டதாரிகளை மட்டுமே, வேலைக்காக பல முன்னணி ஐடி நிறுவனங்கள் பணியமர்த்துகின்றன. அதன்படி முக்கிய IT நிறுவனங்களில், அதிக டிமாண்ட் கொண்ட வேலைகளுக்குத் தேவைப்படும் திறன்கள் குறித்த அறிக்கையை Quess Corp நிறுவனம் "Annual Digital Skills Report FY24" என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், குறிப்பிட்ட திறன் கொண்ட வேலைகளும், அதற்கான டிமாண்டின் சதவீதமும் கொடுக்கப்பட்டுள்ளது.

டெவெலப்மென்ட் 66 சதவீதமும், ERP என்பதற்கு 12 சதவீதம், டெஸ்டிங் 7 சதவீதமும், டிசைன் மற்றும் இன்ஜினியரிங் சார்ந்த திறன் கொண்டவர்களுக்கு 7 சதவீதம் மற்றும் நெட்வொர்க்கிங்-கிற்கு 5 சதவீதமும் டிமாண்ட் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையானது, தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, இனிமேல் IT நிறுவனங்களில் பணிபுரிய வரும் திறன் கொண்ட பணியாளர்களுக்கான வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது.

அதேபோல் கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி மற்றும் டேட்டா அனாலிடிக்ஸ் போன்ற பிரிவுகளுக்கும் குறிப்பிடத்தக்க தேவை இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவு தற்போது அதிகரித்து வருவதால் கிளவுட் இன்ஜினியர்ஸ், செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட் போன்ற பிரிவுகளுக்கான ஆட்களின் தேவையும் அதிகரித்துள்ளது. அதேபோல நெட்வொர்க்கில் இருக்கும் பாதிப்புகள் குறித்து அடையாளம் காணவும், பாதுகாப்பு நெறிமுறைகளை செயல்படுத்தித் திறம்பட நிர்வகிக்கவும், நெட்வொர்க்கிங் சார்ந்த பணியாளர்களுக்கும் அதிக தேவை உள்ளதாக அறிக்கை கூறுகிறது.

டேட்டா அனாலிடிக்ஸ் பிரிவும், சிறந்த வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் டேட்டா அனாலிஸ்ட், டேட்டா சயின்டிஸ்ட் மற்றும் பிசினஸ் இன்டெலிஜென்ஸ் ஸ்பெஷலிஸ்ட் போன்ற பிரிவுகளில் வேலை செய்வதற்கு திறன் கொண்ட நபர்களின் தேவை அதிகரித்துள்ளது.

தொழில்நுட்ப வேலைகளுக்கு அப்பால், பல்வேறு பிற துறைகளுக்கும் டிமாண்ட் அதிகரித்துள்ளது. அதன் அடிப்படையில் நிதி சார்ந்த துறைகளுக்கு 19 சதவீதமும், ஆட்டோமோட்டிவ் துறைகளுக்கு 15 சதவீதமும், கன்சல்டிங் துறைகளுக்கு 9 சதவீதமும் மற்றும் ப்ராடக்ட் டெவலப்மெண்ட் துறைக்கு 6 சதவீதமும் தேவை உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், தற்போது கார்கள் மற்றும் விமானங்களை உற்பத்தி செய்யும் தொழில்கள், நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதிகம் மாற்றம் அடைந்து வருகிறது. எப்படியெல்லாம் புதிய தயாரிப்புகளை சிறந்த வழியில் உருவாக்குவது என்பதைப் பற்றி இந்நிறுவனங்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். இதுவும், அதிக திறன் கொண்ட நபர்களின் தேவைக்கு ஒரு காரணமாக அமைகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+