குயிக் காமர்ஸ் பூதம்.. 2 லட்சம் மளிகை கடைகள் மூடல்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

சென்னை: இந்தியாவில் ஒருபுறம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நாம் வீட்டிலிருந்தபடியே நமக்கு தேவையான மளிகை பொருட்கள் உட்பட அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம் என்ற சூழல் உண்டாகிவிட்டது. ஆனால் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி இலட்சக்கணக்கான சிறு வணிகர்களை பெருமளவில் பாதித்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விநியோகஸ்தர்கள் சங்கமான, அகில இந்திய நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு (All India Consumer Products Distributors Federation) சிறு வணிகர்களின் நிலை குறித்து கவலைக்குரிய ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குயிக் காமர்ஸ் பூதம்..  2 லட்சம் மளிகை கடைகள் மூடல்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

அதில் இந்தியாவில் சுமார் 13 மில்லியன் பல சரக்கு கடைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 10 மில்லியனுக்கும் அதிகமான கடைகள் இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் தான் செயல்படுகின்றன. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு பல சரக்கு கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வருகை கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் கூட பல சரக்கு கடைகளில் பொருட்கள் விற்பனையாகாமல் தேங்கி இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பாக இந்த கூட்டமைப்பின் தேசிய தலைவர் தரியாசில் பாட்டில் அளித்துள்ள பேட்டியில் குயிக்காமர்ஸ் தளங்கள் தான் இந்தியாவில் பலசரக்கு கடைகளை அழித்து வருவதாக கூறியுள்ளார். பலசரக்கு கடைகளுக்கு இருந்த வாடிக்கையாளர்களும் பல சரக்கு கடைகளின் லாபமும் குறைந்ததற்கு குயிக்காமர்ஸ் நிறுவனங்களே காரணம் எனக் கூறியுள்ளார்.

அதிக தள்ளுபடி வழங்குவது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் பல சரக்கு விற்பனை என்பது தற்போது சமநிலை இல்லாத ஒரு தளமாக மாறிவிட்டது எனக் கூறியுள்ளார் . இதன் காரணமாக சிறிய அளவில் பல சரக்கு கடைகளை வைத்திருப்பவர்கள் எல்லாம் தங்களுடைய கடைகளை மூடும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்றும் இந்தியாவில் 2 லட்சம் பலசரக்கு கடைகள் மூடப்பட்டுள்ளன என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

அண்மைக்காலமாக இந்தியாவில் ஆன்லைன் தளங்கள் வாயிலாக பல சரக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவிக்கிறது மற்றொரு அறிக்கை.

தங்களுடைய பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டின் பண்டிகை காலத்தில் ஆன்லைன் தளங்கள் வழியாக தங்களின் பொருட்கள் விற்பனை 250 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்களாம்.

ஆனால் கடைகளுக்கு வந்து நேரடியாக பொருட்களை வாங்கி செல்லும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்க பாதியாகிவிட்டதாம். குயிக்காமர்ஸ் தளங்கள் வழங்கும் தள்ளுபடிகளுக்கு நிகராக சலுகைகளை வழங்க முடியாமல் சிறு வணிகர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக பெருநகரங்களில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் குயிக்காமர்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சியால் 90 ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளனவாம். சிறு வணிகர்களை காப்பதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+