இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த 5 மாதங்களாக நிகழ்ந்த தொடர்ச்சியான மோசமான விற்பனையால், சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை அனைவரும் பெரிய இழப்பை சந்தித்தனர்.
யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் நாட்டின் பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் என கருதப்படும் ராதாகிஷன் தமனி, ஜூன்ஜூன்வாலா குடும்பம் உள்ளிட்ட நபர்களும் பங்குச் சந்தையின் இந்த சாட்டை அடியிலிருந்து தப்பவில்லை. பெரிய முதலீட்டாளர்களை பொறுத்தவரை அவர்களது போர்ட்போலியாவில் சிறு நிறுவன பங்குகளின் விலையில் ஏற்பட்ட பெரிய சரிவால்தான் அவர்கள் இழப்பை சந்தித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 1 முதல் இதுவரையிலான காலத்தில் டாப் 10 பெரிய முதலீட்டாளர்களின் மொத்த பங்குகளின் மதிப்பு ரூ.81,000 கோடி குறைந்துள்ளது. குறிப்பாக டிமார்ட் நிறுவனரும். பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளருமான ராதாகிஷன் தமனியின் கைவசமுள்ள பங்குகளின் மதிப்பு 28 சதவீதம் அல்லது ரூ.64,000 கோடி குறைந்து ரூ.1.67 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் இறுதியில் ரூ.2.31 லட்சம் கோடியாக இருந்தது.
2024 அக்டோபர் 1 முதல் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் குடும்ப பங்குகளின் மதிப்பு 19 சதவீதம் குறைந்துள்ளது. இந்த குடும்பத்தின் மொத்த போர்ட்போலியாவின் மதிப்பு சுமார் ரூ.59,709 கோடியாக இருந்தது. இதில், அண்மையில் பட்டியலிடப்பட்ட இன்வென்டுரஸ் நாலெட்ஜ் சொல்யூன்ஸ் நிறுவன பங்குகள் சேர்க்கப்படவில்லை.
கடந்த அக்டோபர் 1 முதல் ஆகாஷ் பன்ஷாலியின் போர்ட்போலியாவின் மதிப்பு 16 சதவீதம் குறைந்துள்ளது. இவர் முதலீடு செய்த குஜராத் ப்ளோரோகெமிக்கல்ஸ் பங்குகளின் விலை 13 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம் ஆகாஷின் இரண்டாவது பெரிய முதலீடான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் (பேடிஎம்) இந்த காலகட்டத்தில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதலீட்டு வங்கியாளரும், தொழிலதிபருமான ஹேமேந்திர கோத்தாரியின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சொத்து மதிப்பு 29 சதவீதம் குறைந்துள்ளது. அக்டோபர் 1 முதல் இவரது இரண்டு முக்கிய பங்குகளான அல்கைல் அமைன்ஸ் கெமிக்கல்ஸ் மற்றும் சொனாட்டா சாப்ட்வேர் ஆகியவை முறையே 28 மற்றும் 33 சதவீதம் வீழ்ச்சி கண்டன.
முகுல் அகர்வால், ஆஷிஷ் கச்சோலியா மற்றும் யூசஃபாலி காதர் போன்ற சில முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் சூறாவளியை சமாளித்து கொண்டு, தங்கள் இழப்புகளை ஒற்றை இலக்கித்திற்குள் கட்டுப்படுத்திக் கொண்டனர். பரம் கேப்பிடலின் முகுல் அகர்வாலின் போர்ட்போலியா மதிப்பு 6 சதவீதம் மட்டுமே குறைந்தது. இந்த காலத்தில் பிஎஸ்இ பங்குகள் 40 சதவீதம் அதிகரித்ததே முகுல் அகர்வாலின் இழப்பு கட்டுக்குள் இருப்பதற்கு முக்கிய காரணம்.
Story written by: Subramanian
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications