இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி-யின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் அவரது ஆசை காதலியும், வைர வியாபாரி வீரேன் மெர்ச்சன்ட் மகளான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.
இவர்களது திருமணத்திற்கு முன்னதாக ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் பிரமாண்ட விழா ஒன்று நடைபெற்றது. இது அவர்களது இரண்டாவது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டமாகும். அம்பானி வீட்டுக் கொண்டாட்டம் குறித்துச் சொல்லவே தேவையில்லை, நவராத்திரி, தீபாவளி, சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி என அனைத்து பண்டிகைகளையும் மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடுவது வழக்கம்.

இதில் அம்பானியின் இளைய வாரிசின் திருமணம், மொத்த குடும்பமும் கொண்டாடித் தீர்க்கின்றனர். 2 நிச்சயதார்த்த விழா, 2 திருமண முன் வைபோக கொண்டாட்டம், அடுத்தது திருமணம் என தடல் புடலாக நடக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் நடந்த நிகழ்ச்சிகள் மிகவும் பிரைவேட் ஆக நடைபெற்றது. அழைப்பு விடுக்கப்பட்ட பிரபலங்களுக்கும் கூட போன் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது கொண்டாட்டங்களின் ஒவ்வொரு புகைப்படமும் வெளியாகி வருகிறது.

இந்த விழாவில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாக இருந்தது, ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த கவுன் ஆகும். லண்டனை தலைமையிடமாகக் கொண்ட டிசைனர் ராபர்ட் வன் (Robert Wun) என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த கருப்பு கவுனில், ராதிகாவுக்கு ஆனந்த் அம்பானி தனது 22 வயதில் அவருக்கு எழுதிய காதல் கடிதம் மொத்தமாக அச்சிடப்பட்டிருந்தது.
பிரபல ஆடை டிசைனர் ராபர்ட் வன் தயாரித்து சொகுசு கப்பலில் ராதிகா அணிந்திருந்த கருப்பு கவுன், வெள்ளை நிற ஷிஃபான் துணியால் ஆனது.
"என் பிறந்தநாளுக்காக அவர் எனக்கு நீண்ட காதல் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் என்னைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தியிருந்தார்," என்று ராதிகா வோக் (Vogue) பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

"இந்த காதல் கடிதத்தை நான் என்றென்றும் பத்திரமாக வைத்திருக்க விரும்பினேன். நான் என் குழந்தைகளுக்கும், பேரன் பேத்திகளுக்கும் இதைக் காட்டி, 'இதுவே எங்கள் காதல்' என்று சொல்ல விரும்பினேன்" என்று அவர் மேலும் கூறினார். ராதிகா முதல் முறையாக ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியாகும்.
இந்த க்ரூஸ் விழாவிற்குக் கேட்டி பேரி (Katy Perry), டேவிட் குட்டா (David Guetta), பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ் (Backstreet Boys) மற்றும் ஆண்ட்ரியா பொசெல்லி (Andrea Bocelli) ஆகிய பிரபல பாடகர்கள் இந்த நான்கு நாள் விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு இசை நிகழ்ச்சிகளை வழங்கினர்.

ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டர் (Jio World Convention Centre) பிரமாண்ட வளாகத்தில் மூன்று நாட்கள் திருமண விழாக்கள் நடைபெறவுள்ளன.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications