தென்னிந்திய திரையுலகின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் ராதிகா சரத்குமார். இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இவர் நடித்த இரண்டு படங்களுமே அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களாக இருக்கின்றன.
கிட்டதட்ட 40 ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகில் தனது அசைக்க முடியாத முத்திரையை பதித்து வருபவர் ராதிகா சரத்குமார். ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், வெற்றிகரமான தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இந்த ஆண்டு ராதிக்காவுக்கான ஆண்டு என கூறும் அளவுக்கு ராதிகா சரத்குமாரின் இரண்டு படங்கள் பெரிய ஹிட்டாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த தாய்கிழவி படத்தில் தன்னுடைய கெட்டப் மற்றும் நடிப்பின் மூலம் தான் ஒரு ஜாம்பவான் என நிரூபித்தார். இந்த படத்தை தயாரிக்க ஆன செலவு 10 கோடி ரூபாய் தான். ஆனால் இந்த படம் சுமார் 75 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. அதாவது போட்ட முதலீட்டை விட லாபம் அதிகம்.
அடுத்ததாக சூர்யாவுக்கு தாயாரக விஸ்வநாதன் & சன்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெளிவந்த 100 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்துவிட்டது. அந்த வகையில் ராதிகாவுக்கு இந்த ஆண்டு பெஸ்ட்டான ஒரு ஆண்டாக உள்ளது.
ராதிகா சரத்குமாரை பொறுத்தவரை திரையுலகில் நீண்டகாலமாக செயல்பட்டு வருவதால், படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், விளம்பரங்களில் நடிப்பது, ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் சீரியல்களை தயாரிப்பது என பல வழிகளில் வருமானம் வருகிறது.
திரைப்படங்கள் மட்டுமின்றி, சின்னத்திரையில் அவர் நடித்த சித்தி, அண்ணாமலை, செல்வி போன்ற பல மெகா ஹிட் தொடர்கள் அவருக்கு மிகப்பெரிய நற்பெயரையும், வருமானத்தையும் ஈட்டித் தந்தன. ராடான் மீடியா ஒர்க்ஸ் (Radaan Mediaworks) ராதிகாவின் மிகப்பெரிய பலம். தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிப்பு, திரைப்பட விநியோகம் என தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இவர் வணிக ரீதியாக பெரும் வெற்றியை பெற்றுள்ளார். இதுவே இவரது சொத்து மதிப்பில் பெரும்பகுதியை கொண்டுள்ளது.
திரைப்பட தயாரிப்பு தாண்டி, பல்வேறு வணிக முதலீடுகளிலும் ராதிகா ஈடுபட்டுள்ளார். இது இவரது நிதி நிலையை தொடர்ந்து வலுவாக வைத்திருக்க உதவுகிறது. பல்வேறு தளங்களும் வெளியிடும் தகவல்களின் படி, ராதிகாவின் சொத்து மதிப்பு சுமார் 53 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. 2024 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட போது அவர் வெளியிட்ட பிரமாண பத்திரய்த்தில் இந்த தகவல் உள்ளது.
பிரம்மாண்டமான வாழ்க்கை முறை மற்றும் திரையுலகில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள ராதிகா, தனது கடின உழைப்பின் மூலம் இந்த நிலையை அடைந்துள்ளார்.ராதிகாவின் வெற்றிக்கு காரணம், அவர் காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டதுதான். 80-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த அவர், பிறகு குணச்சித்திர வேடங்களிலும், பின்னர் சின்னத்திரையிலும், தயாரிப்பாளராகவும் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். இதுவே அவரது வெற்றியின் ரகசியம். நடிப்பை தாண்டி நிர்வாக திறமை மூலம் பலருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார்.


Click it and Unblock the Notifications

