இந்தியாவின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சி அடைந்து வந்தாலும், உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டிற்கு போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க நாட்டின் பொருளாதாரம் குறைந்தபட்சம் 8 சதவீத வேகத்தில் வளர்ச்சி அடைய வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறினார்.
ரகுராம் ராஜன் இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைக்கு பிள்ளையார் சுழி போட்டவர், நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் அவர் தற்போது இந்திய மக்களுக்கு போதுமான வேலைவாய்ப்புகள் உருவாகாமல் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை நடந்த ஒரு முக்கிய நிகழ்ச்சியில் இந்திய மக்கள் தொகைக்கு தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்க நாங்கள் 8%-8.5% அளவிலான வளர்ச்சி பாதையில் இருக்க வேண்டும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் 6%-6.5% என்ற பொருளாதார வளர்ச்சியில் இந்தியா மிகவும் வலுவாக உள்ளது.
ஆனால் இந்தியாவின் வேலைவாய்ப்புகளின் தேவையுடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் அதிகப்படியான இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் இல்லாமல் உள்ளனர் என வீடியோ கான்பிரென்ஸ் வாயிலாக ரகுராம் ராஜன் பேசினார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்ற பெரிய பொருளாதாரங்களை விட அதிகமாக இருந்த போதிலும், ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு சந்தையில் பல லட்சம் பேர் சேர்க்கப்பட்டாலும் இந்திய மக்களுக்கு போதுமான வேலைகள் உருவாக்கப்படவில்லை என்பது மோடி அரசின் மீது முக்கிய குற்றச்சாட்டாகவே உள்ளது.
அக்டோபர் மாதம் நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் அக்டோபர் மாதம் 10.05% ஆக உயர்ந்துள்ளது, இது கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகப்படியான அளவீடாக பார்க்கப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 7 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று HSBC மதிப்பிட்டு உள்ளது. இந்தியாவின் 7.5% வளர்ச்சியுடன், வேலைவாய்ப்பு பிரச்சனையில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே தீர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications