கொரோனா வைரஸ் பரவலானது அரசாங்கங்களுக்கு சவாலாக இருக்கும் இந்த நேரத்தில், வைரஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக நிறுவனங்கள் மற்றும் மக்களை நம்ப வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வைரஸ் பரவுவதற்கு ஒரு வரம்பு உள்ளது என்பதை மக்கள் உணர விரும்புகிறார்கள். ஏனெனில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாகவோ அல்லது ஒரு வித தீர்வைக் காணலாம் என்ற நம்பிக்கை இருப்பதால் அப்படி உணரலாம் என்றும் ப்ளூம்பெர்க் ராஜன் கூறியுள்ளார்.

இந்த கட்டத்தில் அரசாங்கம் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், பின்னர் வரும் பொருளாதார தூண்டுதல் நடவடிக்கைகளை எதிர்த்து போராடுவதை விட, பரவி வரும் தொற்று நோயை எதிர்த்து போராடுவது தான் சிறந்த வழி என்றும் ராஜன் கூறியுள்ளார்.
மேலும் இந்த கொடிய வைரஸ் பரவுவது உலகப் பொருளாதாரத்தை இன்னும் மோசமாக்குகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் பேங்க் ஆப் அமெரிக்காவின் பொருளாதார வல்லுனர்கள் இந்த ஆண்டு உலகளாவிய வளர்ச்சியை 2.8% ஆக கணித்துள்ளனர். இது கடந்த 2009ம் ஆண்டு முதல் ஒப்பிடும்போது தற்போது தான் வீழ்ச்சி கண்டுள்ளது.
சந்தைகள் மீதான தீவிர நம்பிக்கையில் இருந்து தற்போது, நாம் தீவிர பீதிக்கு நகர்ந்துள்ளோம். அதிலும் இவை அனைத்தும் ஒரு வார இடைவெளிக்குள் நகர்ந்துள்ளது என்றும் ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியில் ராஜன் மேற்கோளிட்டுள்ளார்.
மேலும் வைரஸ் வெடிப்பு நிறுவனங்களுக்கு வினியோகச் சங்கிலிகளுக்கு மற்றும் வெளிநாட்டு உற்பத்தி வசதிகளை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில் கொரோனா வெடிப்பு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும் உலக சுகாரதார அமைப்பு கூறியுள்ளது.
சீனாவில் நிலைகொண்டுள்ள இந்த வைரஸால் இதுவரை 2,788 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியமும் சர்வதேச பொருளாதாரம் சரியும் என கூறியுள்ளது. ஏனெனில் சர்வதேச அளவில் கொரோனாவால் உற்பத்தி மோசமாக பாதிக்கப்படலாம் என்று ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதன் தாக்கம் இன்னும் அதிகரித்தால் உலகப் பொருளாதாரம் என்னவாகுமோ? சொல்லப்போனால் இந்திய பொருளாதாரமும் இன்னும் மோசமாகலாம் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications