மும்பை: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தங்களது பாரம்பரிய பங்களாவை மகள் ராஹா பெயரில் எழுதி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்பீர் கபூர். இவரும் முன்னணி நடிகையான ஆலியா பட்டும் கடந்த 2022 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்தாண்டில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு ராஹா கபூர் என பெயர் சூட்டியுள்ளனர். இந்த குழந்தைக்கு மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தங்களது பாரம்பரிய பங்களாவை எழுதி வைக்க ரன்பீர் கபூர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ளது கிருஷ்ண ராஜ் பங்களா. ரன்பீர் கபூரின் தாத்தா பாட்டிக்கு சொந்தமானது இந்த பங்களா. அவர்களுக்கு பின்னர் இந்த பங்களா ரன்பீர் கபூரின் பெற்றோருக்கு எழுதி வைக்கப்பட்டது.
இந்நிலையில் பாரம்பரியமிக்க இந்த பங்களாவை மகள் பெயரில் எழுதி வைக்க ரன்பீர் கபூர் முடிவு செய்துள்ளார். இதன் மதிப்பு 250 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பாலிவுட்டிலேயே அதிக சொத்து மதிப்பு மிக்க குழந்தையாக இந்த குழந்தை மாற இருக்கிறது.
தற்போது வீட்டில் உள்ள சில பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன .ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் தம்பதிகள் அவர்களுக்கு ஏற்ற வகையில் வீட்டில் சில மாற்றங்களை செய்து வருகின்றனர்.
இது முடிவடைந்த உடன் சொத்தை தங்களது மகள் பெயருக்கு எழுதி வைத்துவிட்டு அங்கேயே குடிபெயர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதிக்கு பாந்த்ரா பகுதியில் நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன . வற்றின் மொத்த மதிப்பு 60 கோடி ரூபாய் ஆகும். இருப்பினும் பாரம்பரிய வீட்டில் மகள் வளர்வதையே இவர்கள் விரும்புகின்றனராம்.

ஷாருக்கான், அமிதாப் பச்சன் போல ஒரு சொகுசு வீட்டை கட்ட வேண்டும் என ரன்பீர் கபூருக்கு நீண்ட நாட்களாக ஆசை இருந்து வருகிறது. தற்போது கிருஷ்ண ராஜ் பங்களாவை அதற்கு ஏற்ற படி சீரமைத்து வருகின்றனர்.
தற்போது வீடானது ரன்பீரின் தாய் நீது கபூரின் பெயரில் இருக்கிறது. அதனை பேத்தி பெயருக்கு மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வீட்டின் சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் நீது கபூர், ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் ராஹா கபூர் ஆகியோர் ஒன்றாக இந்த வீட்டில் வசிக்க உள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications