டெல்லி : நாட்டில் தற்போதுள்ள நிலை மிக பயமான சூழல் உள்ளதாக பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தனியார் பத்திரிக்கையின் விருது வழங்கும் விழா சனிக்கிழமையன்று நடந்தது.
இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டவர்கள் பங்க்கேற்றனர். இவர்கள் தவிர சில தொழிலதிபர்களும் பங்கேற்றனர்.
அச்சம் நிலவி வருகிறது
இந்த விழாவில் பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தற்போது இந்தியாவில் மிகவும் பயமான சூழல் நிலவி வருகிறது. அரசினை யாரும் விமர்ச்சிக்க பயப்படுகின்றனர். இதனை யாரும் வெளிப்படையாகவும் கூற முன்வரவில்லை. நான் இதனை வெளிப்படையாகக் கூறுகிறேன். தொழில்துறையில் அச்சம் இருப்பதாகவும் எந்த தொழிலதிபரும் அதை பகிரங்கமாக சொல்ல மாட்டார்.
திறம்பட நடவடிக்கை இல்லை
எனினும் மோடி அரசு திறம்பட நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் ராகுல் பஜாஜ் விமர்சித்தார். இதே ராகுல் பஜாஜ் பற்றி மற்றொரு தொழிலதிபர் கூறுகையில், ராகுல் பஜாஜை பற்றி அறிந்தவர்கள் அவர் அச்சமற்றவர்கள் என்று தான் கூறுவார்கள். அரசின் மோசமான நடவடிக்கைகளுக்கு கூட எப்போதும் பாராட்டும் தொழிலதிபர்களைப் போல் அவர் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சவாலான தருணங்கள்
81 வயதான ராகுல் பஜாஜின் 54 ஆண்டுகள் தொழில் முறை கதையும் மிக சுவாரஷ்யமானது. கடந்த ஆண்டு அவர் பிசினஸ் ஸ்டேண்டர்டுக்கு அளித்த பேட்டியில், சவாலான தருணங்கள் உள்ளதாக கூறினார். இப்போதெல்லாம் அவர் அன்றாட வியாபாரத்தில் குறைவாக ஈடுபடுகிறார். எனினும் அவரது ஒவ்வொரு வர்த்தகத்தினையும் அவரது மகன்களான ராஜூவ் மற்றும் சஞ்சீவ் கவனித்து வருகின்றனர்.
தொழில் மீது ஈர்ப்பு கொண்டவர்
ராகுல் 1965ம் ஆண்டு பஜாஜ் ஆட்டோவில் இணைந்த போது அகுர்டியில் அதன் ஆலை முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அவர் தெற்கு மும்பையில் மிக வசிதியான வாழ்கை வாழ்ந்து வந்த நிலையில், அகுர்குடிக்கு குடிபெயர்ந்தார். அதோடு ஆலை பகுதிகுள்ளேயே ஒரு வீட்டைக் கட்டினார். அவரது குடும்பத்தினரும் அந்த எளிமையான வாழ்க்கையையே பின்பற்றினர். அந்த அளவுக்கு அவரது தொழிலின் மீதும், வேலை மீதும் அக்கறை கொண்டவர் ராகுல் என்றும் கூறப்படுகிறது.
இது யோசிக்க வேண்டிய விஷயம் தான்
இந்த நிலையில் ராகுல் வணிகத்திற்கு வெளியே பல கோணங்களில் உள்ளார். அவர் 2012 வரை நாடாளூமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும் 2001லியே பத்ம பூஷன் விருதுக்கு கௌரவிக்கப்பட்டார். இந்த அளவுக்கு பெயர்போன ஒருவர் தொழில் துறையில் சிறந்து விளங்கிய ஒருவர், இப்படி ஒரு கருத்தை கூறியிருப்பது சற்று வருத்தத்தை அளித்தாலும், கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமாகவே உள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications