இந்திய அரசை விமர்சிக்க கார்ப்பரேட்கள் பயப்படுகின்றன.. ராகுல் பஜாஜ் விமர்சனம்..!

டெல்லி : நாட்டில் தற்போதுள்ள நிலை மிக பயமான சூழல் உள்ளதாக பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தனியார் பத்திரிக்கையின் விருது வழங்கும் விழா சனிக்கிழமையன்று நடந்தது.

இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டவர்கள் பங்க்கேற்றனர். இவர்கள் தவிர சில தொழிலதிபர்களும் பங்கேற்றனர்.

அச்சம் நிலவி வருகிறது

அச்சம் நிலவி வருகிறது

இந்த விழாவில் பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தற்போது இந்தியாவில் மிகவும் பயமான சூழல் நிலவி வருகிறது. அரசினை யாரும் விமர்ச்சிக்க பயப்படுகின்றனர். இதனை யாரும் வெளிப்படையாகவும் கூற முன்வரவில்லை. நான் இதனை வெளிப்படையாகக் கூறுகிறேன். தொழில்துறையில் அச்சம் இருப்பதாகவும் எந்த தொழிலதிபரும் அதை பகிரங்கமாக சொல்ல மாட்டார்.

திறம்பட நடவடிக்கை இல்லை

திறம்பட நடவடிக்கை இல்லை

எனினும் மோடி அரசு திறம்பட நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் ராகுல் பஜாஜ் விமர்சித்தார். இதே ராகுல் பஜாஜ் பற்றி மற்றொரு தொழிலதிபர் கூறுகையில், ராகுல் பஜாஜை பற்றி அறிந்தவர்கள் அவர் அச்சமற்றவர்கள் என்று தான் கூறுவார்கள். அரசின் மோசமான நடவடிக்கைகளுக்கு கூட எப்போதும் பாராட்டும் தொழிலதிபர்களைப் போல் அவர் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சவாலான தருணங்கள்

சவாலான தருணங்கள்

81 வயதான ராகுல் பஜாஜின் 54 ஆண்டுகள் தொழில் முறை கதையும் மிக சுவாரஷ்யமானது. கடந்த ஆண்டு அவர் பிசினஸ் ஸ்டேண்டர்டுக்கு அளித்த பேட்டியில், சவாலான தருணங்கள் உள்ளதாக கூறினார். இப்போதெல்லாம் அவர் அன்றாட வியாபாரத்தில் குறைவாக ஈடுபடுகிறார். எனினும் அவரது ஒவ்வொரு வர்த்தகத்தினையும் அவரது மகன்களான ராஜூவ் மற்றும் சஞ்சீவ் கவனித்து வருகின்றனர்.

தொழில் மீது ஈர்ப்பு கொண்டவர்

தொழில் மீது ஈர்ப்பு கொண்டவர்

ராகுல் 1965ம் ஆண்டு பஜாஜ் ஆட்டோவில் இணைந்த போது அகுர்டியில் அதன் ஆலை முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அவர் தெற்கு மும்பையில் மிக வசிதியான வாழ்கை வாழ்ந்து வந்த நிலையில், அகுர்குடிக்கு குடிபெயர்ந்தார். அதோடு ஆலை பகுதிகுள்ளேயே ஒரு வீட்டைக் கட்டினார். அவரது குடும்பத்தினரும் அந்த எளிமையான வாழ்க்கையையே பின்பற்றினர். அந்த அளவுக்கு அவரது தொழிலின் மீதும், வேலை மீதும் அக்கறை கொண்டவர் ராகுல் என்றும் கூறப்படுகிறது.

இது யோசிக்க வேண்டிய விஷயம் தான்

இது யோசிக்க வேண்டிய விஷயம் தான்

இந்த நிலையில் ராகுல் வணிகத்திற்கு வெளியே பல கோணங்களில் உள்ளார். அவர் 2012 வரை நாடாளூமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும் 2001லியே பத்ம பூஷன் விருதுக்கு கௌரவிக்கப்பட்டார். இந்த அளவுக்கு பெயர்போன ஒருவர் தொழில் துறையில் சிறந்து விளங்கிய ஒருவர், இப்படி ஒரு கருத்தை கூறியிருப்பது சற்று வருத்தத்தை அளித்தாலும், கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமாகவே உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+