வீட்டை விற்று வியாபாரம் குப்பையில் துவங்கிய பிஸ்னஸ்.. இன்று ரூ.3 கோடி சம்பாதிக்கிறார் ராகுல்..!

வாழ்க்கையில் உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் உறுதியுடன் இருந்தால் வெற்றி உங்களை வந்தடைந்தே தீரும். அனைத்து சவால்களையும் மீறி உலகில் மிகச் சிலரே வெற்றி பெறுகிறார்கள். சத்தீஸ்கரின் ராகுல் சிங்கும் இதேபோன்றவர் தான், ராகுல் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி 1 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை துவங்கியுள்ளார்.

தனது வீட்டை விற்றதன் மூலம், ராகுல் EcoSoul ஹோம் என்னும் நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனம் மரத்தின் இலைகள் மற்றும் மூங்கில்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த டேபிள்வேர், கிட்சன்வேர், டிஷ்யூ பேப்பர், பேப்பர் கப், ஸ்ட்ரா, பிளேட் என பொருட்களை உருவாக்குகிறது.

வீட்டை விற்று வியாபாரம் குப்பையில் துவங்கிய பிஸ்னஸ்.. இன்று ரூ.3 கோடி சம்பாதிக்கிறார் ராகுல்..!

இந்நிறுவனம் தற்போது கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. ராகுல் தனது நிறுவனத்தை விரைவாக வளர்த்து, அத்துடன் அவர் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து வருகிறார். நிறுவனத்தின் செயல்பாடுகள் தற்போது பல நாடுகளில் பரவியுள்ளன.

ராகுல் சிங் சத்தீஸ்கரின் பிலாய் என்னும் கிராமத்தில் நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்தவர். ராகுல் தனது கல்வியை நகரின் முனிசிபல் அரசுப் பள்ளியில் முடித்தார். 2005 இல் சூரத்தில் பி.டெக் படிப்பை முடித்தார். ஜாம்ஷெட்பூரில் உள்ள சேவியர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ முடித்த ராகுல், 2008ல் அமெரிக்கா சென்றார்.

2008 முதல் 2019 வரை ராகுல் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்தார், இருப்பினும் ராகுல் சுயமாக செயல்பட விரும்பினார். அவர் சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் துறையில் வர்த்தகத்தை துவங்க வேண்டும் என்பது அவருடைய ஆசை, அதனால் தான் சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தார்.

இருப்பினும், இது மிகவும் சிக்கலானதாக இருந்தது. ராகுல் ஆரம்பத்தில் பல இடையூறுகளை சந்தித்தார், ஆனாலும் அவர் விடாப்பிடியாக இருந்தார். அப்போது ராகுலுக்கு அமெரிக்க நிறுவனம் ஒன்று வேலை கொடுத்தது. அங்கு அவருக்கு அரவிந்த் கணேசனுடன் அறிமுகம் ஏற்பட்டது.

2020 இல், அவர்கள் இருவரும் வாஷிங்டனில் EcoSoul Home என்ற வணிகத்தை நிறுவினர். நிறுவனம் செயல்படத் தொடங்கிய பிறகு அதை விரிவுபடுத்த நினைத்தார். 2022ல், ராகுலும் அவரது குடும்பத்தினரும் இந்தியா திரும்பினர். உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட உற்பத்தி வசதிகள் இயங்கி வருவதால், இந்நிறுவனம் இப்போது இந்தியா, அமெரிக்கா, கனடா, யுனைடெட் கிங்டம், ஜெர்மனி மற்றும் பிற நாடுகள் உட்பட பல நாடுகளில் உள்ளது.

இந்நிறுவனத்தின் வருவாய் இன்றைய நிலவரப்படி ரூ.300 கோடியைத் தாண்டியுள்ளது. ராகுல் தனது வியாபாரத்தின் மூலம் ஏற்கனவே 1.3 மில்லியன் டன் பிளாஸ்டிக்கை சேமித்துள்ளார். ராகுலின் நிறுவனம் பல நாடுகளில் செயல்படுகிறது. அதன் 150க்கும் மேற்பட்ட உற்பத்தி வசதிகள் இன்று உலகம் முழுவதும் இயங்கி வருகின்றன.

Story Written by: I.Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+