மல்டிபேக்கர் ரயில்வே பங்குகளில் ஒன்றான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) பங்குகள் இன்று பெரும் ஏற்றம் கண்டன. இந்த பங்கு ஆரம்ப வர்த்தகத்தில் 10 சதவீதம் வரை வளர்ச்சியைப் பதிவுசெய்து ரூ.462 என்ற விலையை எட்டியது. நிறுவனம் கிழக்கு ரயில்வேயில் இருந்து ரூ. 837 கோடி மதிப்பிலான ஆர்டரைப் பெற்றுள்ளதாக ஆர்விஎன்எல் நிறுவனம் அறிவித்ததை அடுத்து முதலீட்டாளர்கள் ஆர்விஎன்எல் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை சந்தை முடிவில், ரயில் விகாஷ் நிகம்-ன் பங்கின் விலை ரூ. 420 இல் தொடங்கியது. ஆனால் இன்று ரூ. 451 இல் என்ற அளவில் தொடங்கியது. இன்ட்ராடே ரூ.462 அளவை எட்டியுள்ளது. ஆனால் அதன் பிறகு சற்று குறைந்துள்ளது. தற்போதைய பங்கு விலையில் ஆர்விஎன்எல் சந்தை மதிப்பு ரூ. 93,510 கோடி ஆகும். 52 வார அதிகபட்சமாக ரூ.647 கோடியாகவும், 52 வாரக் குறைந்தபட்சம் ரூ.162 ஆகவும் உள்ளது. 2024ல் இதுவரை பங்கு விலை 145 சதவீதம் அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை அளித்துள்ளது. கடந்த ஆண்டில் இது 169 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மல்டிபேக்கர் 1,766 சதவீத வருமானத்தை அளித்துள்ளது.

கிழக்கு ரயில்வே உடனான ஒப்பந்தத்தின்படி, கட்டிங், நிரப்புதல், போர்வை அமைத்தல், சிறு பாலங்கள் கட்டுதல், பெரிய பாலங்கள் கட்டுதல், தடுப்புச் சுவர், லெவல் கிராசிங், பக்கவாட்டு வடிகால், காலிபஹரி முதல் பிரதான்குடா வரையிலான நீர் வடிகால் ஆகியவற்றை ஆர்விஎன்எல் மேற்கொள்ளும்.
ஆர்விஎன்எல் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இது ரயில்வே துறையால் பராமரிக்கப்படுகிறது. நாட்டில் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்த நிறுவனம் 2003 இல் அரசால் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் ரயில் பாதைகள் மற்றும் நிலையங்கள் கட்டுதல் உள்ளிட்ட ரயில்வே தொடர்பான திட்டங்களை மேற்கொள்கிறது.
ரயில் விகாஸ் நிகம் ஆர்டர் புக்: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டின் படி, ரயில் விகாஷ் நிகம் நிறுவனத்தின் ஆர்டர்கள் ரூ. 83,000 கோடியை எட்டியுள்ளது. சமீபத்திய வாரங்களில், நிறுவனம் ரூ.7000 கோடிக்கு மேல் கூடுதல் ஆர்டர்களைப் பெற்றுள்ளது. இதுவரையில் மொத்த ஆர்டர் மதிப்பை ரூ. 90,000 கோடி ஆக உள்ளது. FY23-24 இல், 142 ஏலங்களை பெற்றுள்ளது. இதன் மதிப்பு ரூ.65,000 கோடி ஆகும். நிறுவனம் சிவில் இன்ஜினியரிங் திட்டங்களில் 23.24%, மின் திட்டங்களில் 35.78% மற்றும் சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு (S&T) திட்டங்களில் 14.27% வெற்றி விகிதத்தை எட்டியுள்ளது.
இந்த நிதியாண்டிற்குள் நிறுவனம் ரூ.75000 கோடி மதிப்புள்ள 150 திட்டங்களுக்கு ஏலம் எடுக்க திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் மூலோபாயம் அதன் வருடாந்திர வருவாயை விட 3-4 மடங்கு ஆர்டரை பெறுவதில் கவனம் செலுத்துகிறது.
இதற்கிடையில், தற்போதைய நிலவரப்படி மதியம் 12.35 அளவில் ஆர்விஎன்எல் பங்கு சுமார் 5.59% உயர்வில் ரு.443.65 ஆக வர்த்தகமாகி வருகிறது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications