ரயில்வே விதிகள்: டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் எவ்வளவு அபராதம்? பிடிபட்டால் TTE என்ன செய்வார்?

இந்திய ரயில்வே நாட்டில் உள்ள உள்ள ஏழை எளியோருக்கு உதவும் வகையில் பல்வேறு இடங்களுக்கு பயணிக்க மலிவான விலையில் டிக்கெட்களை வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான பயணிகள் இந்திய ரயில்வேயின் உதவியுடன் பயணம் செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்வதற்கு சில விதிகள் உள்ளன. பயணம் செய்யும் பயணிகள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இல்லையெனில், ரயில்வேயின் அபராதம் மற்றும் தண்டனைக்கு ஆளாகலாம். ரயில்வேயின் மிக முக்கியமான விதி, டிக்கெட்டுடன் பயணம் செய்வதாகும்.

எந்தவொரு பயணியும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால், TTE அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு. அதோடு மட்டுமல்லாமல், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பயணியை தண்டிக்கும் உரிமைகளும் TTE-க்கு உள்ளன. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அவர் என்ன செய்யலாம் என்ற விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

 ரயில்வே விதிகள்: டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் எவ்வளவு அபராதம்? பிடிபட்டால் TTE என்ன செய்வார்?

அபராதம் விதிக்கப்படலாம்: ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் பயணியை TTE கண்டுபிடித்தால் அவருக்கு அபராதம் விதிக்கலாம். இந்த அபராதம், ரயில் தொடங்கும் ரயில் நிலையங்களில் இருந்து டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் பயணியை TTE கண்டுபிடித்த ரயில் நிலையம் வரையிலான கட்டணமாகும். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் ரூ.250 அபராதம் விதிக்கப்படும்.

இந்திய ரயில்வேயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதற்கு TTE அபராதம் விதிக்கலாம். மேலும் TTE விரும்பினால், டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் பயணியை ரயிலில் இருந்து இறங்கச் செய்யலாம். இந்த நடவடிக்கை முற்றிலும் TTE-ஐப் பொறுத்தது. அவர் விரும்பினால், அபராதம் விதித்து, பயணத்தைத் தொடரவும் அனுமதிக்கலாம்.

அபராதம் விதித்த பிறகு, TTE பயணிகளை ஸ்லீப்பர் அல்லது ஏசி கோச்சில் இருந்து ஜெனரல் கோச்சிற்கு அனுப்பலாம். இந்திய ரயில்வேயின் விதிகளின்படி, டிக்கெட் இல்லாமல் பயணிப்பதை TTE கண்டறிந்தால், அவர் ரயில் தொடங்கும் நிலையத்திலிருந்து பயணி பிடிபட்ட ரயில் நிலையம் வரை கட்டணத்தை வசூலித்து அபராதம் விதித்தபின் கோச்சில் ஏதேனும் இருக்கை காலியாக இருந்தால் அதில் அமரவும் செய்யலாம்.

இவ்வாறு, ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் பயணிகளுக்கு எதிராக TTE க்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உரிமை உள்ளது. அபராதம் விதிப்பது, ரயிலிலிருந்து இறங்க வைப்பது, பொது பெட்டிக்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை TTE எடுக்கலாம். பயணிகள் ரயில்வே விதிகளைப் பின்பற்றி, டிக்கெட்டுடன் பயணம் செய்வதன் மூலம், இத்தகைய சிரமங்களைத் தவிர்க்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+