மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2026ஐ தாக்கல் செய்ய உள்ள நிலையில், ரயில்வே துறையில் அதிக நிதி ஒதுக்கீட்டை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகச் செயல்படும் இத்துறை, கடந்த பட்ஜெட்டிலும் பலன் பெற்றது. இந்த ஆண்டு மெகா மூலதனச் செலவு (CAPEX) ஒதுக்கீட்டை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்மலா சீதாராமன் தனது ஒன்பதாவது தொடர்ச்சியான பட்ஜெட் 2026 உரையை பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஆற்றவுள்ளார். மத்திய பட்ஜெட்டுக்கு ஒரு நாளே உள்ள நிலையில், ரயில்வே போன்ற முக்கியத் துறைகள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்துறை இந்தியாவின் பொருளாதார இலக்குகளை அடைவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ப்ளூம்பெர்க் நடத்திய 29 பொருளாதார வல்லுநர்கள் ஆய்வறிக்கைப்படி, சாலைகள், துறைமுகங்கள், ரயில்வேயில் அரசு அதிக செலவுகளை மேற்கொள்ளும் என சொல்கிறது. ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்ட விரிவாக்கம், இறக்குமதி வரிக் கொள்கை சீர்திருத்தம் ஆகியவை இவர்களின் முக்கிய எதிர்பார்ப்புகள். சாலை/ரயில்வே போன்ற உள்கட்டமைப்புத் துறைகளுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என்றும் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
பாதுகாப்பு, வேகம், பயணிகளின் வசதி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து நாடு தழுவிய ரயில்வே வலையமைப்பை நவீனமயமாக்குவது பட்ஜெட்டின் முக்கிய இலக்காக இருக்கும். போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்த, ரயில்வேயில் புதிய முதலீடுகளும் தொழில்நுட்ப மேம்பாடுகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.
மோதிலால் ஓஸ்வால் ஆய்வாளர்கள், பட்ஜெட் 2026இல் ரயில்வேத்துறை மூலதனச் செலவு அதிகரிக்கும் என குறிப்பிட்டனர். "ரயில்வேக்கான மூலதனச் செலவு ஆண்டுக்கு ஆண்டு 8-10% உயரலாம் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு உயரும் பட்சத்தில், ரயில் மற்றும் சாலைப் பிரிவுகளில் அதிக திட்ட ஒப்பந்தங்கள் கிடைக்கும். இது எங்கள் கண்காணிப்பில் உள்ள உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்குப் பயனளிக்கும்" என்றனர்.
பஜாஜ் ப்ரோக்கிங் நிபுணர்கள், கவச் போன்ற பாதுகாப்பு அமைப்புகள், ரயில் நிலைய நவீனமயமாக்கல், திட்ட விரைவுபடுத்துதல் ஆகியவற்றில் பட்ஜெட் கவனம் செலுத்தும். துறைமுக அடிப்படையிலான, பலதரப்பு இணைப்பு வசதிகள் – குறிப்பாக ரயில் சரக்கு வழித்தடங்கள், உள்நாட்டு முனையங்கள், தளவாட மையங்கள், பசுமை உள்கட்டமைப்பு – பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என்கின்றனர்.
கடந்த பட்ஜெட் 2025இல், மத்திய அரசு ரயில்வே துறைக்கு ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கியது. இது ரயில்வேயை மேம்படுத்துவதற்கான அரசின் தொடர் முயற்சி. இந்தப் பெரிய ஒதுக்கீடு, துறைக்குக் கணிசமான ஆதாயமளித்தது என்று அப்போதைய ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.கடந்த ஆண்டு ஒதுக்கீடுகள், ரயில்வே வளர்ச்சிக்கு அடித்தளமிட்டன.
அத்துடன், அடுத்த இரண்டு-மூன்று ஆண்டுகளில் 100 அம்ரித் பாரத், 50 நமோ பாரத், 200 வந்தே பாரத் ரயில்கள் (படுக்கை, இருக்கை வசதிகளுடன்) தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். PPP முதலீடுகளுடன் சேர்த்து, ரயில்வேக்கான மொத்த பட்ஜெட் ரூ2.64 லட்சம் கோடி எனக் குறிப்பிட்ட வைஷ்ணவ், "இது ரயில்வேயை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய மற்றும் விரிவான முயற்சி" என்று கூறினார். எனவே அதே போன்ற அறிவிப்புகளும் ஒதுக்கீடுகளும் இந்த ஆண்டும் இடம்பெறும் என வலுவாக எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications