இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் சௌகரியமாக பயன்படுத்தக்கூடிய ஒரு பொது போக்குவரத்து தான் ரயில்வே. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்திய ரயில்வேயில் பயணம் செய்கின்றனர். ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டம், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலம் என தொலைதூரப் பயணங்களுக்கு ஏற்றவையாக ரயில்கள் இருக்கின்றன.
குறைந்த கட்டணத்தில் நிறைவான பயணத்தை ரயில்கள் வழங்குகின்றன. இதன் காரணமாக தான் இன்றும் இந்தியாவின் மிகப்பெரிய ஒரு போக்குவரத்து சேவையாக ரயில்வே தொடர்ந்து தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய ரயில்வே பொறுத்தவரை பல்வேறு செயலிகள் வாயிலாக நாம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிகிறது . அந்த வகையில் குறிப்பிட்ட ஒரு செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

இந்திய ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பயணிகள் RailOne செயலி வாயிலாக அன்ரிசர்வடு ஜெனரல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்தால் டிக்கெட் கட்டணத்தில் மூன்று சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது . இந்த சலுகை ஆறு மாதங்களுக்கு இருக்கும் என தெரிவித்துள்ளது . ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14ஆம் தேதி வரையிலான ஆறு மாத காலத்தில் பயணிகள் ரயில் ஒன் செயலியின் மூலம் அன்ரிசர்வ்டு ஜெனரல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும்போது அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் மூன்று சதவீத தள்ளுபடி கிடைக்கும்.

இது தொடர்பாக இந்திய ரயில்வே , ரயில் ஒன் செயலியில் மாற்றங்களை கொண்டு வரும்படி ரயில்வே இன்ஃபர்மேஷன் சிஸ்டம் அமைப்புக்கு கடிதம் எழுதி இருக்கிறது. R wallet மட்டுமில்லாமல் யுபிஐ, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் பேமென்ட்களை பயன்படுத்தக்கூடிய அனைத்து பயணிகளுக்கும் 3% தள்ளுபடி கிடைக்கும் .
ஏற்கனவே R wallet பயன்படுத்துவோருக்கு மட்டுமே 3% கேஷ் பேக் வழங்கப்பட்டது. இது தொடர்ந்து கிடைக்கும் இது மட்டும் இல்லாமல் டிஜிட்டல் பேமண்டுகளுக்கு மூன்று சதவீத தள்ளுபடியும் கிடைக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது. இதன்படி பார்த்தால் ஜனவரி 14-ஆம் தேதியிலிருந்து ரயில் ஒன் செயலி வாயிலாக ஒரு பயணி R wallet பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்தால் ஆறு சதவீதம் வரை டிக்கெட் கட்டணத்தில் தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடி ரயில் ஒன் செயலி வாயிலாக மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வேறு எந்த ஒரு ஆன்லைன் தளம் அல்லது செயலி வாயிலாக முன்பதிவு செய்தாலும் இந்த தள்ளுபடி கிடைக்காது. பயணிகள் ரயில்ஒன் செயலியை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அனைத்து விதமான ரயில் சேவைகளையும் இந்த ஒரே செயலியில் நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி செயலி , ரயில் நிகழ் நேர தகவல்களை அறிந்து கொள்ள ஒரு செயலி, புகார்களை பதிவு செய்ய ரயில் ஒன் என பல செயலிகளை பயன்படுத்தி வந்தோம். ஆனால் இந்த அனைத்து சேவைகளையுமே இந்த ரயில் ஒன் என்ற ஒரே செயலியில் பயன்படுத்தி கொள்ளலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications