இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்தான இந்திய ரயில்வே துறையின் சேவை தரம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் பதிவு செய்வதில் இருக்கும் பிரச்சனைகள் மட்டும் குறையவே இல்லை.
இந்தச் சூழ்நிலையில், மக்களின் டிக்கெட் புக்கிங் சேவையின் தரத்தை மேம்படுத்தவும், தேவையில்லாமல் இத்தளங்களில் இருப்பவர்களைக் களையவும் புதிய மாற்றத்தைக் கொண்ட வர ஆலோசனை செய்து வருகிறது.
ஐஆர்சிடிசி டிக்கெட் புக்கிங்
இந்திய மக்களின் மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் புக்கிங் சேவையை மேம்படுத்தும் வகையிலும், தேவையில்லாமல் இத்தளத்தில் இருப்பவர்களை வெளியேற்றும் வகையிலும் ஐஆர்சிடிசி தளத்தில் லாக்இன் செய்யப்படும் அனைவரும் ஆதார், பான் மற்றும் பாஸ்போர்ட் போன்ற அடையாள ஆவணங்களை ஐஆர்சிடிசி கணக்குடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற விதிமுறையைக் கொண்டு வர ஆலோசனை செய்து வருகின்றனர்.
அடையாள ஆவணங்களை இணைப்பு
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புத் துறையின் (RPF) தலைவர் அருண் குமார் கூறுகையில், ஐஆர்சிடிசி தளத்தில் தேவையில்லாமல் இருப்போரைக் களைய இதற்கு முன்பு human intelligence பயன்படுத்தப்பட்டது, ஆனால் இதின் மூலம் எவ்விதமான பலனும் கிடைக்கவில்லை, இதனால் ஐஆர்சிடிசி கணக்குடன் அடையாள ஆவணங்களை இணைக்கத் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டு உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார் அருண் குமார்.
ஐஆர்சிடிசி கணக்கு
லாக்இன் செய்யும் போதே ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார், பான் மற்றும் பாஸ்போர்ட் போன்ற அடையாள ஆவணங்களை இணைப்பது மூலம், இத்தளத்தில் தேவையில்லாமல் பயன்படுத்துவோர் வெளியேற்றப்பட்டு மக்களுக்குச் சிறப்பான மற்றும் விரைவான சேவையை அளிக்க முடியும்.
2 வருட முயற்சி
கடந்த 2 வருடங்களாக ஐஆர்சிடிசி தளத்தில் தரம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த அமைப்பு ரயில்வே பாதுகாப்புத் துறை (RPF) பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.
ரயில் சுரக்ஷா செயலி
இதேபோல் ரயில்வே பாதுகாப்புத் துறையின் (RPF) தலைவர் அருண் குமார் ரயில் பயணிகளின் பாதுகாப்பு பிரச்சனைகளைக் களைய வேண்டும் என்று பாதுகாப்பு பிரச்சனைகளைப் பதிவு செய்யும் தளமான ரயில் சுரக்ஷா செயலி உருவாக்கப்பட்டு உள்ளது என்று கூறினார். இந்தச் செயலியின் மூலம் ரயில் பயணிகள் தங்களது பயணத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் பதிவு செய்ய முடியும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications