இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்தான இந்திய ரயில்வே துறையின் சேவை தரம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் பதிவு செய்வதில் இருக்கும் பிரச்சனைகள் மட்டும் குறையவே இல்லை.
இந்தச் சூழ்நிலையில், மக்களின் டிக்கெட் புக்கிங் சேவையின் தரத்தை மேம்படுத்தவும், தேவையில்லாமல் இத்தளங்களில் இருப்பவர்களைக் களையவும் புதிய மாற்றத்தைக் கொண்ட வர ஆலோசனை செய்து வருகிறது.
ஐஆர்சிடிசி டிக்கெட் புக்கிங்
இந்திய மக்களின் மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் புக்கிங் சேவையை மேம்படுத்தும் வகையிலும், தேவையில்லாமல் இத்தளத்தில் இருப்பவர்களை வெளியேற்றும் வகையிலும் ஐஆர்சிடிசி தளத்தில் லாக்இன் செய்யப்படும் அனைவரும் ஆதார், பான் மற்றும் பாஸ்போர்ட் போன்ற அடையாள ஆவணங்களை ஐஆர்சிடிசி கணக்குடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற விதிமுறையைக் கொண்டு வர ஆலோசனை செய்து வருகின்றனர்.
அடையாள ஆவணங்களை இணைப்பு
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புத் துறையின் (RPF) தலைவர் அருண் குமார் கூறுகையில், ஐஆர்சிடிசி தளத்தில் தேவையில்லாமல் இருப்போரைக் களைய இதற்கு முன்பு human intelligence பயன்படுத்தப்பட்டது, ஆனால் இதின் மூலம் எவ்விதமான பலனும் கிடைக்கவில்லை, இதனால் ஐஆர்சிடிசி கணக்குடன் அடையாள ஆவணங்களை இணைக்கத் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டு உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார் அருண் குமார்.
ஐஆர்சிடிசி கணக்கு
லாக்இன் செய்யும் போதே ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார், பான் மற்றும் பாஸ்போர்ட் போன்ற அடையாள ஆவணங்களை இணைப்பது மூலம், இத்தளத்தில் தேவையில்லாமல் பயன்படுத்துவோர் வெளியேற்றப்பட்டு மக்களுக்குச் சிறப்பான மற்றும் விரைவான சேவையை அளிக்க முடியும்.
2 வருட முயற்சி
கடந்த 2 வருடங்களாக ஐஆர்சிடிசி தளத்தில் தரம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த அமைப்பு ரயில்வே பாதுகாப்புத் துறை (RPF) பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.
ரயில் சுரக்ஷா செயலி
இதேபோல் ரயில்வே பாதுகாப்புத் துறையின் (RPF) தலைவர் அருண் குமார் ரயில் பயணிகளின் பாதுகாப்பு பிரச்சனைகளைக் களைய வேண்டும் என்று பாதுகாப்பு பிரச்சனைகளைப் பதிவு செய்யும் தளமான ரயில் சுரக்ஷா செயலி உருவாக்கப்பட்டு உள்ளது என்று கூறினார். இந்தச் செயலியின் மூலம் ரயில் பயணிகள் தங்களது பயணத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் பதிவு செய்ய முடியும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications