சமீபகாலமாக உணவுப் பொருட்களின் விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. அதோடு வேகமாக நகரும் நுகர்வோரின் பொருட்களின் விலையை உயர்த்த இருப்பதாகவும் முன்னணி FMCG நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக காய்கறி விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மதுரை மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ள காரணத்தினால் வெங்காய விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
திங்கட்கிழமை அன்று சில்லறை சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 90 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக விளைச்சல் பாதித்துள்ளது. இதனால் பழைய வெங்காய ஸ்டாக்குகளையே நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். முறையான குளிர் பதன கிடங்கு வசதி இல்லாததால் ஸ்டாக் வைக்க முடியாமல் சில வியாபாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் சில்லறை விற்பனை சந்தையில் கிலோ ரூ.30 முதல் 50 ரூபாய்க்கு கிடைத்த நிலையில், தற்போது மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் கிலோ 60-க்கும், சில்லறை சந்தையில் 90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில வியாபாரிகள் மாவட்டம் முழுவதும் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்துள்ளனர்.
மதுரையின் மொத்த வெங்காய வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகியான இஸ்மாயில் கூறுகையில், "மதுரைக்கு திண்டுக்கல், தேனி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் வருகிறது. ஆனால் இந்த மாவட்டங்களில் ஆங்காங்கே பெய்த கன மழையின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டது.
மழை மற்றும் வரத்து குறைவின் காரணமாக சேமிப்பு கிடக்குகளில் வைத்திருந்த வெங்காய ஸ்டாக்கை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் மதுரைக்கு வரத்து திரும்ப ஆரம்பித்ததும் கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
வெங்காய விலை உயர்வு குறித்து பேசிய மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகளின் சங்கத் தலைவர் சின்னமையன், பொதுவாக சென்ட்ரல் மார்க்கெட்டுக்கு தினமும் 10 டன் வெங்காயம் வரும். ஆனால் தற்போது இந்த வரத்து 30 டன்னாக குறைந்துள்ளது. மழையால் புதிய அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளதால் பழைய ஸ்டாக்குகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனால் விலை உயர்ந்துள்ளது.
ஆனால் மற்ற காய்கறிகளின் விலை கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் அதே விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது. மாட்டுத்தாவணி சந்தையில் முறையான சேமிப்புக் கிடங்கு வசதி இல்லாததால் காய்கறி வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.
சந்தைக்கு எதிரே அமைந்துள்ள சிப்கோவில் உள்ள சேமிப்புக் கிடங்குகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண் விற்பனைத் துறை வணிகர்களை கேட்டுக் கொண்டாலும், தங்களுக்கு உதவும் வகையில் சந்தைக்குள் சேமிப்புக் கிடங்குகளை ஏற்படுத்த வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications