சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் பெண்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்த போராடிய ஐந்து ஆண்கள் குறித்து இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

ராஜா ராம் மோகன் ராய்:
இந்தியாவில் ஒரு காலத்தில் மோசமான ஒரு சடங்கு நடைமுறையில் இருந்தது. சதி அதாவது கணவர் இறந்தவுடன் அவருடைய இறுதிச் சடங்கில் மனைவி தன்னுடைய உயிரையும் தியாகம் செய்து உடன்கட்டை ஏற வேண்டும் . பெண்கள் உயிர் வாழ்வதற்கான உரிமையை கூட சமூகம் மறுத்தது. பல பெண்களும் கட்டாயப்படுத்தப்பட்டு தீயில் தள்ளப்பட்டனர். இந்த காட்டுமிராண்டித்தனமான உடன்கட்டை ஏறும் நடைமுறைக்கு எதிராக குரல் எழுப்பி இதனை ஒழித்தவர் தான் ராஜா ராம் மோகன் ராய். பிரம்ம சமாஜ் என்ற அமைப்பை உருவாக்கி சதிக்கு எதிரான போராட்டம் நடத்தி பல பெண்களின் உயிரை காப்பாற்றியவர். இது தவிர இவர் பெண்களுக்கான சொத்துரிமை மற்றும் குழந்தை திருமணங்களையும் எதிர்த்து போராடினார்.
மனோக்ஜி கர்செட்ஜி:
இந்தியாவில் ராயல் ஆசிய சங்கம் மற்றும் ராயல் புவியியல் சங்கத்தின் உறுப்பினராக இருந்தவர். பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்துப் போராடியவர். 1859 ஆம் ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கான முதல் ஆங்கிலப் பள்ளியை தொடங்கினார். முதலில் மும்பையில் இருந்த தன்னுடைய வீட்டில் பெண்களுக்கான ஆங்கில பள்ளியை தொடங்கி மிகப்பெரிய புரட்சியை மேற்கொண்டார். வீட்டில் தொடங்கப்பட்ட பள்ளி பின்னாளில் பெண்களுக்கான மிகப்பெரிய கல்வி நிலையமாக மாறியது. பெண்களுக்கும் கல்வி கற்பதற்கு உரிமை உள்ளது என்பதை நிலைநிறுத்தியவர்.
3.ஜோதிராவ் கோவிந்தராவ் பூலே:
இந்தியாவில் பெண்களுக்கான உரிமைகளை நாட்டியதில் முக்கிய பங்கு ஆற்றியவர் தான் ஜோதிராவ் கோவிந்தராவ் பூலே. தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த பெண்கள் பள்ளிக்கு சென்று கல்வி பெற அனுமதிக்கப்படாமல் இருந்த கால கட்டம் அது. அதனை எதிர்த்து போராட்டம் செய்தவர். தன்னுடைய மனைவிக்கு கல்வி கற்பிக்க தொடங்கினார் , இதனால் தன்னுடைய சொந்த குடும்பத்தினராலேயே ஒதுக்கி வைக்கப்பட்டாலும் விடாமுயற்சியால் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த சிறுமிகளுக்கு என பள்ளியை தொடங்கி நடத்தினார். விதவை மறுமணத்தை ஆதரித்தார், பெண் சிசுக்கொலையை தடுக்க போராட்டினார்.
பெஹ்ராம்ஜி மலபாரி:
குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு எழுத்தாளர், பெண் உரிமைகளுக்காகவும் குழந்தை திருமணத்திற்கு எதிராகவும் தொடர்ந்து போராடியவர். தன்னுடைய எழுத்துக்கள் மூலம் விதவை மறுமணங்களை ஆதரித்தார். 1885 ஆம் ஆண்டு கணவர் வீட்டுக்கு திரும்ப வேண்டும் இல்லை என்றால் சிறைப்படுத்தப்படுவாய் என ஒரு பெண்ணுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை எதிர்த்து போராடி பெண்களுக்கு வாழும் உரிமை இருப்பதை நிலைநிறுத்தினார்.
அம்பேத்கர்:
பெண்களுக்கு என எந்த ஒரு உரிமையும் மறுக்கப்பட்ட காலத்தில் பெண்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர். பெண்களுக்கு சொத்தில் உரிமை, விவாகரத்து கோருவதற்கான உரிமை என பல்வேறு உரிமைகளையும் சட்டப்பூர்வமாக கொண்டு வந்து நடைமுறைப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications