பாக்பட்: முயற்சி இருந்தால் எந்த ஒரு தொழிலிலும் முன்னுக்கு வரலாம் என என்பதற்கு உதாரணமாக இருக்கும் ஒரு குடும்பத்தை பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
ராஜஸ்தானை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் துடைப்பம் தயாரித்து விற்பனை செய்து கணிசமான லாபத்தை பெற்று வருகின்றனர். கெரு என்பவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவரது குடும்பத்தில் மொத்தம் 20 பேர் இருக்கிறார்கள்.

ராஜஸ்தானில் இவர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அன்றாட உணவுக்கு கூட கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தான் இவர்கள் குடும்பமாக துடைப்பம் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட தொடங்கி தற்போது ஓரளவு லாபம் பார்க்க தொடங்கியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வந்த இவர்கள் வேலை தேடி உத்திரபிரதேச மாநிலத்தின் பாக்பட் மாவட்டத்தில் குடும்பத்துடன் குடி பெயர்ந்தனர். அங்கேயும் பெரிய அளவில் இவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே இவர்கள் துடைப்பம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட தொடங்கினர். குடும்பத்தில் இருக்கும் 20 பேரும் அங்கிருந்த உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற்று அருகில் இருந்த காடுகளில் உள்ள பனை மரங்களில் இருந்து கிளைகளை எடுத்து வந்து அவற்றை துடைப்பங்களாக வடிவமைத்தனர்.
ஒவ்வொரு துடைப்பம் தயாரிப்பதிலும் அவர்களுக்கு பத்து ரூபாய் லாபம் கிடைக்கிறது. இவர்களே நேரடியாக உள்ளூர் சந்தைகளிலும் கிராமங்களிலும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
எனவே தயாரிப்பு விற்பனை என அனைத்தையும் இவர்கள் குடும்பத்தில் இருக்கும் 20 பேரே பார்த்துக் கொள்வதால், இவர்களால் ஒரு துடைப்பத்தை 30 ரூபாய் வரை விற்பனை செய்ய முடிகிறது. இதன் காரணமாக தற்போது இவர்கள் ஓர் ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடிகிறது என தெரிவிக்கின்றனர்.
கெரு குடும்பத்தில் இருக்கும் 20 பேருமே இதில் ஈடுபாட்டுடன் செயல்படுகின்றனர், அவர்களே துடைப்பங்களை தயாரித்து அவர்களே அதனை சந்தைப்படுத்தி விற்பனையும் லாபம் அனைத்தும் இவர்களுக்கே வந்து சேர்கிறது.
இந்த ஒரு சிறிய தொழில் மூலம் தன்னுடைய குடும்பத்திற்கு ஒரு நிலையான வருமானம் கிடைத்திருப்பதாக கூறும் கெரு தற்போது தாங்கள் மூன்று வேலையும் உணவு உண்பதாக சந்தோஷமாக தெரிவிக்கிறார்.
ஒற்றுமையாக இணைந்து நாம் அனைவரும் ஒரு வேலையை செய்யும் போது நிச்சயம் அது வெற்றிக்கான பாதையில் நம்மை கொண்டு சென்று விடும் என்பதற்கு கெருவின் குடும்பம் ஒரு சான்று.
Story written by: Devika
More From GoodReturns

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications