ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர், தனது நிரந்தரமான வேலையை விட்டுவிட்டு, சொந்தமாக விடுதிகள் (Homestays) தொடங்கி, தற்போது தனது முந்தைய சம்பளத்தை விட அதிக வருமானம் ஈட்டி வருவதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள தகவல் விவாதத்தை கிளப்பியுள்ளது. எனது வேலையை விட்ட பிறகு, எனது மாத வருமானம் பழைய சம்பளத்தை விட பல மடங்கு உயர்ந்துள்ளதாக சமூக வலைதளமான ரெடிட் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முதல் வருடம் போராட்டம்தான் :அந்தப் பதிவில், அந்த இளைஞர் தான் கடந்த ஆண்டு மாதம் ரூ.1.3 லட்சம் சம்பாதித்த வேலையை விட்டு விலகினேன். பின்னர், ராஜஸ்தானில் விடுதிகள் தொடங்க முடிவெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். பெரிதாக எந்தத் திட்டமும் இல்லாமல், சொந்தமாக எதையாவது உருவாக்க வேண்டும், அதிகம் பயணிக்க வேண்டும் என்ற ஆசையே இந்த முடிவுக்குக் காரணம் என்று அந்த இளைஞர் கூறியுள்ளார்.

தொடக்கத்தில் சில மாதங்கள் முழுமையான சந்தேகம் மற்றும் நிலையற்ற வருமானத்துடன் இருந்தன. சில நேரங்களில் மிகவும் பயமாக இருந்தது என்று அவர் தனது போராட்ட காலம் குறித்தும் தெரிவித்துள்ளார். சேமிப்பு, பொறுமை, மந்தமான மாதங்கள் என எல்லாவற்றையும் கஷ்டப்பட்டு கற்றுக்கொள்வதற்கு ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால், தற்போது அதற்கெல்லாம் பலன் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இரட்டிப்பான வருமானம் : இந்த மாதம், ஏர் பிஎன்பி (Airbnb) முன்பதிவுகள் மூலம் மட்டுமே அந்த இளைஞருக்கு ரூ.2.18 லட்சம் கிடைத்துள்ளதாகவும், அவரது மொத்த வருமானம் ரூ.2.5 லட்சத்தை தாண்டியுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது அவரது முந்தைய நிறுவனச் சம்பளத்தை விட கிட்டத்தட்ட இரட்டிப்பு ஆகும்.
"இது ஒரே இரவில் கிடைத்த வெற்றி அல்ல. பயமும் நிச்சயமற்ற தன்மையும் இருந்த ஓராண்டு காலத்துக்கு முன், இதுபோன்ற வெற்றிக் கதைகள் எனக்கு நம்பிக்கை அளித்தன. அதுபோன்ற நம்பிக்கையை மற்றவர்களுக்கும் அளிப்பதற்காகவே இந்தப் பதிவை போடுகிறேன்" என்று அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுக்கள் : இளைஞர், இந்தப் பதிவு பகிரப்பட்டதில் இருந்து, இது சோசியல் மீடியாவில் பலரையும் ஊக்கப்படுத்தியுள்ளது. பாதுகாப்பான வேலையை துறந்து, நிலையற்ற நிதிச் சூழலிலும் உறுதியுடன் நின்று வெற்றி பெற்ற அவரது துணிச்சலை பயனர்கள் பாராட்டி வருகின்றனர்.
"எலிகள் ஓட்டத்தில் இருந்து விலகி, தைரியமான முடிவை எடுத்ததற்கு வாழ்த்துகள் என்றும் நீங்கள் ஒரு உண்மையான வெற்றியாளர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்" என்றும் பயனர்கள் பதிவிட்டுள்ளனர். மேலும், "இது நிறைய தைரியத்தையும் அர்ப்பணிப்பையும் கோரும். அற்புதமான சாதனை. தொழில்முனைவோரின் பயணம் கடினமானது, ஆனால் தொடங்கியவுடன் இதுவே சிறந்த பயணம். வாழ்த்துகள்" என்றும் பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications