உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாகவும் கோலாகலமாகவும் செய்யப்பட்டு வருகின்றன.
ராமர் கோயில் திறப்பு விழா இந்தியாவில் மட்டுமல்லாமல் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் ராட்சத விளம்பர பேனர்கள் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் கிளை சார்பில் அங்கு 40க்கும் மேற்பட்ட ராட்சத விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டெக்சாஸ், இல்லினாய்ஸ், நியூயார்க், நியூ ஜெர்சி, ஜார்ஜியா உள்ளிட்ட பகுதிகளில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இத்துடன் கோயில் திறப்புவிழாவை நேரலையில் பார்ப்பதற்காக அரிசோனா, மிசௌரி மாகாணங்களில் மெகா சைஸ் டிவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நியூஜெர்சியில் உள்ள ஹிந்து சமுகத்தினர் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு ஆவலுடன் இருப்பதாக விஸ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது. கோயில் திறப்புவிழாவை முன்னிட்டு அமெரிக்க வாழ் ஹிந்து கம்யூனிட்டி சார்பில் அமெரிக்கா முழுவதும் கார் பேரணிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் விழாவில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, கோயில் கர்ப்பகிரகத்தில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வில் கலந்து கொள்கிறார். உலகம் முழுவதும் இருந்து ஏராளமான முக்கியஸ்தர்கள் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அயோத்தி கோயிலில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யப்படுவதை முன்னிட்டு பிரான் பிரதிஷ்டா எனும் வேத ஆகம வேள்விகள் ஜனவரி 16 ஆம் தேதி முதல் நடைபெறும்.
வாஷிங்டனில் உள்ள அமெரிக்க கேபிடல் ஹில்லில், 'ஆசியா முழுவதும் ராமாயணம்' என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய தூதர், "ராமாயணம் மற்றும் இந்தோ-பசிபிக் முழுவதும் அதன் பரம்பரை, தலைமுறைகள், மற்றும் அவற்றை எப்போது கற்றுக்கொள்கிறார் என்று சரியாகச் சொல்வது கடினம். மனித உறவுகள், ஆட்சி மற்றும் ஆன்மிகம், தர்மம் அல்லது கடமை, நீதி, தியாகம், விசுவாசம் மற்றும் தியாகம் ஆகியவற்றின் சிக்கலான நுண்ணறிவுகளை ராமாயணக் காவியம் வழங்குகிறது.
ராமாயணத்தில் இந்த கருப்பொருள்கள் ஒவ்வொன்றைப் பற்றியும், பல விஷயங்களைப் பற்றியும் நமக்குக் கற்பிக்க ஏதாவது இருக்கிறது.
ராமாயணக் காவியத்தின் கதைகள் இந்தோ பசிபிக் முழுவதும், கம்போடியா முதல் இந்தோனேசியா வரை, தாய்லாந்து முதல் லாவோஸ் வரை பல நாடுகளில் நன்கு அறியப்பட்டவை.
இந்தக் காவியம் பல்வேறு சமூகங்களின் கலை, இலக்கிய மற்றும் மத மரபுகளில் அவற்றின் தனித்துவமான கலாசார நுணுக்கங்களை உள்ளடக்கி மறுவடிவமைக்கப்பட்டு, மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது. எல்லைகளைக் கடந்த ராமாயணத்தின் தாக்கத்துக்கு நான் தனிப்பட்ட முறையில் சாட்சியாக இருந்தேன் என்று தூதர் சந்து மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications